பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடிவந்த இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புதில் அரச தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அவர் விமர்சித்தார். சனல்4 நிகழ்ச்சியில் இலங்கையினுடைய படுகொலை களங்கள் என்ற ஆவணப்படம் ஒளிபரப்பானது.
இந்த நிகழச்சி ஒளிபரப்பான பின்னர் எம்பி சியொ பய்ன் இவ்வாறு பொதுச்சபையில் பிரிட்டன் அரச நிர்வாகத்தை கடுமையக விமர்சித்தார்.
தொழிலாளர் கட்சி எம்பியான அவர் பொதுச்சபையில் உரையாற்றுகையில் தமிழர்களை வெளிறெற்றும் நடவடிக்கை குறித்து யுகே பார்டர் ஏஜென்சி தனது ஆவணங்களை இலங்கை அரசுடன் பகிரந்து கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டை வெளியேற்பபடுவபர்கள் இலக்கு வர்ண பூச்சுடன் பிரிட்டன் அனுப்புகிறது. ஏன்றார்
பிரிட்டனில் தங்க அனுமதி மறுக்கப்படட புகலிடம் தேடி வந்த 40 பேர் இலங்கைக்கு வியாழக்கிழமை மாலை அனுபனுபப்ப்படுகிறார்கள். அவர்கள் இலங்கையில் கைது செய்யப்படும் அச்சுறுத்தல் மட்டுமல்ல அங்கு அவர்கள் நாடு திரும்பியதும் சித்திரவதையம் செய்யப்படுவார்கள். என பொதுச்சைபையில் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய தமிழர்களில் ஒருவர் ஜெனா கொபிநாத்.முன்னாள் தமிழ் அரசியல் தலைவர். இவர் ஏற்கனவெ இலங்கை அரச நிர்வாகத்தால் கைது செய்ப்பட்டள்ளார் என்றும் மிட்சம் அண்ட் மாடரன் எம்பி கூறினார்.
பிரிட்டனுக்கு பகலிடம் தேடிவந்த மற்றொரு நபர் நாட்டை விட்டு வெளிறெற்றபப்டும் அபாயத்தில் வியாழக்கிழமை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
புதன்கிழமை இரவு அவர் விமான நிலைய காவலில் வைக்கபட்டபோது அவர் இந்த துயர முடிவை மேற்கொள்ள முயன்றார்.
பிரிட்டனில் இருந்து தமிழர்களை இலங்கைக் வெளியேற்றும் நடவடிக்கையை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படும் தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதையும் அந்த அமைப்ப அவதானித்தள்ளளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரந்து வன்முறைகள் நடந்த கொண்டு இருக்கின்றன. அவர்கள் சித்திரவதை செய்ய்படுவதுடன் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளும் நடக்கின்றன என்று எம்பிக்களிடம் மெக்டோனாக் தெரவித்தார்
இலங்கை ஜனாதிபதி ராஜப்பக்ஷே போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் என்ற நிலை உள்ளது. அவர் வானளாவிய நீதி அதிகாரத்தையும் கொள்கை அததிகாரத்தையும் வைத்துக்கொண்டு தனது செயல்களை மேற்கொண்டு வருகிறார் என்றும் அந்த எம்பி தெரவித்தார் காமன்வெல்த் சபையில் முன்னோடியாக பிரிட்டிஷ் அரச உளள்து. அந்த அரசு கண்களை மூடிக்கொள்வதுடன் தமிழர்களை விமானத்தில் தொடர்ந்து ஏற்றி இலங்கைக்ககு அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது என்றும் வேதனை பட்டார்.
கோபிநாத் போன்றவர்கள் இலங்கை அரசக்கு எதிராக செயல்பட்டவர்கள் என அடையாளம் காணபபட்டுளள்னர். ஆத்தகைய நபர்கள் இலங்கை திரும்பும் போது அவர்களுடைய உயிருக்கு உத்ரவாதம் இல்லை. இலங்கை அரசு பழிவாங்க விமானத்தில் ஏற்றி அனுப்பப்படும் தமிழர்கள் வர்ண பூச்சு இலக்குடன் அனுப்பும் நடவடிக்கையை பிரிட்டன் மேற்கொண்டு உள்ளது எனறும் மெக்டோனா எம்பிகளிடம் பேசினார.
சனல் 4 நிகழ்சியில் இறுதிக்கட்டப்போரின்போது இலங்கையில் கைது செய்பப்ட்டவர்கள் கொடூரமாக கொலை செய்ப்பட்ட பதிவுகள் காட்டப்பட்டன. இந்த பயங்கர சித்ரவதைகளை பார்த்த எம்பி பொதுச்சபையில் இலங்கை தமிழர்களை பிரிட்டனைவிட்டு வெளியேற்றக்கூடாது என வலியுறுத்ததினார்.
ஆனாலும் இன்று அவர்களை பிரிட்டன் நாடுகடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment