1. தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றியமை
2. 1948 – 1950 10லட்சம் வரையிலான தமிழ் மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்க பட்டமையும்.
3. இலங்கைத்தீவு முழுவதும் 1956ல் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதும்.
4. 1972 ல் பௌத்தம் அரச மதம் என்று கொண்டு வந்தமையும், தரப்படுத்தல் செய்தமையும்மூல காரணிகளாக அமைந்திருந்தன.
இத்தகைய திட்டமிட்ட சிங்களத்தின் சட்டதிட்டங்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்த தமிழ்ப்பேசும் மக்களை அடக்கியொடுக்குவதற்கு கொடிய இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
1. அவசரகாலச்சட்டம்
2. பயங்கரவாத தடுப்புச்சட்டம்
சட்ட ஆட்சியையும், மனித உரிமைகள் மீறுவதற்கு ஏதுவாக கையாளப்படும் இவ் இரு சட்டங்களின் துணைகொண்டே தமிழ்ப்பேசும் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் சிறைப்பிடிக்கப்பட்டதும், சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும், உயிர் வாழவேண்டும் என்பதற்காகவே தமிழினம் அடைக்கலம் தேடி ஆயிரக்கணக்காக புலம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
14 வயதில் இருந்து கைது செய்யப்பட்ட சிறுவர்கள் முதல் 70 வயது வரையிலான தமிழ் இளைஞர் யுவதிகள், வணக்கத்துக்குரியவர்கள் என்று பல்வேறு தரப்பினர் சிறைகளில் வாழ்கின்றனர். பயங்கரவாதிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் கைது செய்யப்பட்டவர்கள் பலர் சித்திரவதைகளுக்கும், படுகொலைகளுக்கும், விசாரணையற்ற சிறைவாழ்வும், இன்னும் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள சிறையில் நடந்த சித்திரவதை தாங்க முடியாது தமிழருக்கு உதவினேன் என்று ஒத்துக்கொண்ட காரணத்துக்காக அண்மையில் அதுவும் தமிழ்பேசும் நீதிமானால் ஆயுள் தண்டனை தமிழ்மகனுக்கு தீர்ப்பாக கொடுக்கப்பட்டதையும், சிறைகளிலே குழந்தை பிறந்தும், தாயிடம் இருந்து பிஞ்சுகளையும், பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளையும், வாழவேண்டிய இளையவர்கள் வாழவிடாது பிரித்தும் தினம் தினம் சித்திரவதைகளும் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதி இன்னும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
2009ல் தமிழ் இனஅழிப்பின் உச்சம், உலகில் எந்த இனமும் அனுபவிக்காததொரு கொடுமையை சித்திரவதைகளை பாலியல் கொடுமைகளை எமது சொந்தங்கள், ஒரு காலத்தில் நாம் கண்டுகளிப்படைந்த சகோதரர்கள் அனுபவித்ததை சர்வதேச தொலைக்காட்சியினர் ஒளிபரப்பு செய்த போது உறைந்து போனது உலகத்தமிழினம்.
இலங்கையில் சிங்கள அரசாட்சியில் சித்திரவதைக்கு உட்படுதப்பட்டவர்களை தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சாட்சியங்களாக அளிக்கும் படி கேட்டுகொள்கிறோம்.
உங்கள் சாட்சியங்கள் பிரெஞ்சு சட்டமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றதிட்கு எடுத்து செல்ல, இன்று சனல் 4 வின் சிறி லங்காவின் கொலைகளம் காணொளிக்கு வலு சேர்க்கும்.
இன்று நாம் எமது அமைதியிலிருந்து விடுபட்டு இன்று தமிழீழத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் அமைதியான சாட்சியங்கள் அற்ற போரில் (War in silence without witness) தொடரும் சித்திரவதை கற்பழிப்புகள், சமுதாய சீர்ரளிவுகள், உலவியில் அழுத்தங்களில் இருந்து எம் மக்களை விடுவிக்கும் கடமை எமிடம் தான் உள்ளது.
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
No comments:
Post a Comment