அரச காணிகளையும் தேசிய சொத்துக்களையும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த அரசின் நடவடிக்கையினால் எதிர் காலத்தில் ஜனாதிபதி மாளிகையும் நாடளுமன்றத்தையும் விற்பனை செய்யும் நிலைமையே உருவாகும்.மஹிந்த ராஜபக்ஷ பிளஸ் பசில் ராஜபக்ஷ சிந்தனையே இன்று நாட்டில் செயற்படுகிறது.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று கூறினார்.
அரச காணிகளும் தேசிய சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றமை தொடர்பில் ஜே.வி.பியின் எம்.பி அநுர குமார திஸாநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
முதலாவது தாய்நாடு இரண்டாவதும் தாய்நாடு மூன்றாவதும் தாய்நாடு என்று கூறிய அரசு இன்று முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் நாட்டை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் இந்த சுமுகமான நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். நாமும் அவற்றையே எதிர்பார்த்தோம்.
அன்று பொது ஆட்சிக்காலத்தில் காணிகளை குத்தகைக்கு வழங்கினோம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி காலிகோட்டை சிகிரியா ஆகியவற்றை விற்பனை செய்கிறது என்று அரசு வதந்தி கிளப்பியது.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த காலத்தில் வெள்ளையர்களை முறைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று வெள்ளையர்களுடனையே வாழ்கின்றது. அவர்களுடனே கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்கிறது.
அது தமது தேவைகளுக்காக அரசு சொத்துக்களை விற்பதை ஒரு கொள்ளையாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி மாளிகையையும் வெளிநாடுகளுக்கு அரசு விற்பனை செய்யும் சூழ் நிலையும் உருவாகிவிடும்.
கற்பிட்டியில் காணிகள் கொள்ளையிடப் படுகின்றன. ஆலங்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பெறுமதிமிக்க 160 ஏக்கர் காணி வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதன்படி கற்பிட்டியிலுள்ள 81 தீவுகளும் விற்பனை செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மஹிந்த சிந்தனை பிளஸ் பசில் ராஜபக்ஷ சிந்தனையே செயற்படுகிறது. இதனுடன் எதிர்காலத்தில் மிலிந்த சிந்தனையும் இணையும்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை அரசு துண்டாடி 20 மில்லியன் ரூபாப் படி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ் மக்களின் காணிகளே இப்படி விற்கப்படுகின்றன.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று கூறினார்.
அரச காணிகளும் தேசிய சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றமை தொடர்பில் ஜே.வி.பியின் எம்.பி அநுர குமார திஸாநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
முதலாவது தாய்நாடு இரண்டாவதும் தாய்நாடு மூன்றாவதும் தாய்நாடு என்று கூறிய அரசு இன்று முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதும் நாட்டை விற்பனை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் இந்த சுமுகமான நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். நாமும் அவற்றையே எதிர்பார்த்தோம்.
அன்று பொது ஆட்சிக்காலத்தில் காணிகளை குத்தகைக்கு வழங்கினோம். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி காலிகோட்டை சிகிரியா ஆகியவற்றை விற்பனை செய்கிறது என்று அரசு வதந்தி கிளப்பியது.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த காலத்தில் வெள்ளையர்களை முறைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று வெள்ளையர்களுடனையே வாழ்கின்றது. அவர்களுடனே கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்கிறது.
அது தமது தேவைகளுக்காக அரசு சொத்துக்களை விற்பதை ஒரு கொள்ளையாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி மாளிகையையும் வெளிநாடுகளுக்கு அரசு விற்பனை செய்யும் சூழ் நிலையும் உருவாகிவிடும்.
கற்பிட்டியில் காணிகள் கொள்ளையிடப் படுகின்றன. ஆலங்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பெறுமதிமிக்க 160 ஏக்கர் காணி வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதன்படி கற்பிட்டியிலுள்ள 81 தீவுகளும் விற்பனை செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மஹிந்த சிந்தனை பிளஸ் பசில் ராஜபக்ஷ சிந்தனையே செயற்படுகிறது. இதனுடன் எதிர்காலத்தில் மிலிந்த சிந்தனையும் இணையும்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை அரசு துண்டாடி 20 மில்லியன் ரூபாப் படி விற்பனை செய்யப்படுகிறது. தமிழ் மக்களின் காணிகளே இப்படி விற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment