இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ். மாவட்டத்துக்கு முன்னர் ஒதுக்கப்பட்டதைவிட மேலதிக மாக ஆயிரத்து 750 வீடுகள் அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இந்திய அரசினால் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக் காக 50 ஆயிரம் வீடுகள் அமைத் துக் கொடுக்கும் திட்டம் ஆரம் பிக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நடும் வைபவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் அரியாலை நாவலடியில் இடம் பெற்றது.
இந்திய அரசினால் முதற் கட்டமாக யாழ். மாவட்டத்தில் முன்னோடித் திட்டத்தின் கீழ் 150 வீடுகள் அமைக்கும் பணி கள் இடம்பெற்ற வருகின்றன. அத்துடன் இரண்டாயிரம் வீடுகளைப் புனரமைப்பதும், 5 ஆயிரத்து 250 வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் வேலைத் திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கு மேலதிகமாக யாழ். மாவட்டத்தின் வீட்டுத் தேவைகள் இருப்பதாக யாழ். மாவட்ட அரச அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏனெனில் இங்குள்ள பிரதேச செயலர்கள் ஊடாக முன்னிலைப்படுத்தல் அடிப்படையில் தெரிவு செய் யப்பட்ட பெயர் பட்டியில் 10 ஆயிரம் பேர்வரை இருப்பதாலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது விடயத்தில் ஜனாதிபதி செயலகச் செயலாளர் திவாரட்ண யாழ். மாவட்டத்தில் 7 ஆயிரத்து 250 வீடுகளுக்கு மேலதிகமாக 1,750 வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார் என்றார்.
No comments:
Post a Comment