மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முள்ளிக்குளத்தைத் தவிர ஏனைய அனைத்துக் கிராமங்களிலும் மீள்குடியமர்வு நடைபெற்றுள்ளது. இதனால் இந்தக் கிராம மக்கள் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் வாழ்ந்துவருகின்றனர். இவ்வாறு மன்னார் அரச அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் தம்மை மீண்டும் தமது சொந்த இடமான முள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியமர்த்துமாறு கோரும் மனுவொன்றை ஜனாதிபதியிடம் வழங்கும் பொருட்டு என்னிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதேவேளை அக்கிராமத்தைச் சேர்ந்த சில மக்களினால் காயாக்குளி என்ற கிராமம் அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த காயாக்குளிக் கிராமத்தில் குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன்தைத்துள்ளோம்.
அனுமதி கிடைத்தவுடன் காயக்குளி என்ற கிராமத்தில் விரும்பி மீளவும் குடியேறவுள்ள குடும்பங்களை மீள்குயமர்வு செய்யவுள்ளோம் என அரசஅதிபர் என். வேதநாயகன் தெரிவித்தார்.
குறித்த காயாக்குளி என்ற கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்தால் தங்களால் விவசாயம் செய்ய முடியும் என ஒரு பகுதி மக்கள் தெரிவிப்பதாகவும் ஏனையோர் முள்ளிக்குளம் கிராமத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மீள் குடியமர்த்துமாறு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தரர்.
No comments:
Post a Comment