[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 09:18.37 AM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தில் நகரப் பகுதிக்கு அண்மையாக உள்ளது இரத்தினபுரம் கிராமம். முன்பொரு காலத்தில் அழகான வாழ்வியலை கொண்டிருந்த இந்தக் கிராமம் இன்று இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கி பயத்திலும் சீரழிவுகளிலும் அவதிப்படுகின்றது.
குலதுங்க என்ற இராணுவ அதிகாரியாலும் அவருக்கு அடிவருடிகளாக செயற்படும் தணிகாசலம் மாட்டின் பெனடிக்ற் போன்றவர்களின் தமிழின விரோத செயற்பாடுகளாலும் இரத்தினபுர மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.
அண்மையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம் இராணுவத்தின் வற்புறுத்தலின் பேரில் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்னைய நிர்வாகச் செயலாளர் உறுப்பினர்கள் குலதுங்காவினால் அச்சுறுத்தப்பட்டு இ ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு தமக்கு கைக்கூலிகளாக செயற்படும் மாட்டின் பெனடிக்ற் தணிகாசலம் போன்றோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பெனடிக்ற் என்ற இராணுவ கைக்கூலி கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர். இரத்தினபுரத்தில் முன்பு அறியப்படாத ஒருவர்.
தணிகாசலம் என்பவர் வெற்றிலைக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளரான கீதாஞ்சலிக்கு எடுபிடியாக செயற்படுகின்றவர்.
இவர்கள் தற்போது இரத்தினபுரத்தின் வாழ்வை இராணுவத்தினருடன் சேர்ந்து சீரழித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரத்தினபுரத்தில் மட்டுமன்றி ஏனைய கிராமங்களிலும் இதுபோன்று கைக்கூலிகளை வைத்துக்கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகங்களில் இராணுவத்தினர் தலையிட்டு தமிழர்களின் வாழ்வை சீரழித்து வருகின்றனர் என்பது மக்களின் அச்சத்திற்கு உரியதும் விசனத்துக்கு உரியதுமாக இருக்கின்றது.
அண்மையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கம் இராணுவத்தின் வற்புறுத்தலின் பேரில் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்னைய நிர்வாகச் செயலாளர் உறுப்பினர்கள் குலதுங்காவினால் அச்சுறுத்தப்பட்டு இ ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு தமக்கு கைக்கூலிகளாக செயற்படும் மாட்டின் பெனடிக்ற் தணிகாசலம் போன்றோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பெனடிக்ற் என்ற இராணுவ கைக்கூலி கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர். இரத்தினபுரத்தில் முன்பு அறியப்படாத ஒருவர்.
தணிகாசலம் என்பவர் வெற்றிலைக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளரான கீதாஞ்சலிக்கு எடுபிடியாக செயற்படுகின்றவர்.
இவர்கள் தற்போது இரத்தினபுரத்தின் வாழ்வை இராணுவத்தினருடன் சேர்ந்து சீரழித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரத்தினபுரத்தில் மட்டுமன்றி ஏனைய கிராமங்களிலும் இதுபோன்று கைக்கூலிகளை வைத்துக்கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகங்களில் இராணுவத்தினர் தலையிட்டு தமிழர்களின் வாழ்வை சீரழித்து வருகின்றனர் என்பது மக்களின் அச்சத்திற்கு உரியதும் விசனத்துக்கு உரியதுமாக இருக்கின்றது.
No comments:
Post a Comment