செப்டம்பர் மாத இறுதியை நெருங்கிவிட்டோம். என்ன அவசரமோ தெரியவில்லை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
தீபாவளிக்கு முன் படங்களை வெளியிட்டு வசூல் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை போலிருக்கிறது.
அடுத்த ஒன்பது நாட்களில் 9 படங்களை வெளியிடவிருக்கிறார்கள்.
நாளை மறுநாள் செப்டம்பர் 23-ம் தேதி சத்யராஜ்-சாந்தனு நடித்த ஆயிரம் விளக்கு, புதியவர்கள் படைப்பான 'அடுத்தது' மற்றும் இரு சின்ன பட்ஜெட் படங்கள் திரையைத் தொட உள்ளன. இந்த நான்கில் இரு படங்களுக்கு சென்னையில் தியேட்டர் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவிட்டதாம்.
நவராத்திரி வாரமான செப்டம்பர் 29-30 தேதிகளில் மட்டும் 5 புதிய படங்கள் வரவிருக்கின்றன.
இந்த இரு தினங்களிலும் சன் பிக்சர்ஸ் வெளியிடும் விஷாலின் வெடி, சற்குணத்தின் வாகை சூடவா, பிரசன்னா நடித்துள்ள சேரன் தயாரிப்பான முரண், ராரா, வர்ணம் என படங்கள் காத்திருக்கின்றன.
தீபாவளிக்கு முன் படங்களை வெளியிட்டு வசூல் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை போலிருக்கிறது.
அடுத்த ஒன்பது நாட்களில் 9 படங்களை வெளியிடவிருக்கிறார்கள்.
நாளை மறுநாள் செப்டம்பர் 23-ம் தேதி சத்யராஜ்-சாந்தனு நடித்த ஆயிரம் விளக்கு, புதியவர்கள் படைப்பான 'அடுத்தது' மற்றும் இரு சின்ன பட்ஜெட் படங்கள் திரையைத் தொட உள்ளன. இந்த நான்கில் இரு படங்களுக்கு சென்னையில் தியேட்டர் கிடைப்பதே குதிரைக்கொம்பாகிவிட்டதாம்.
நவராத்திரி வாரமான செப்டம்பர் 29-30 தேதிகளில் மட்டும் 5 புதிய படங்கள் வரவிருக்கின்றன.
இந்த இரு தினங்களிலும் சன் பிக்சர்ஸ் வெளியிடும் விஷாலின் வெடி, சற்குணத்தின் வாகை சூடவா, பிரசன்னா நடித்துள்ள சேரன் தயாரிப்பான முரண், ராரா, வர்ணம் என படங்கள் காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment