இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்படையுடன் போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்ட போதும், இன்று ஆரம்பமாகும் ஒத்திகை பெரியளவிலானது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் இந்தியப் பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.இலங்கை இந்தியக் கடற்படைகளின் பெரும் போர் ஒத்திகை திருகோணமலைக் கடற்பரப்பில் இன்று ஆரம்பமாக உள்ளது.கொழும்புடனான இராஜதந்திர, இராணுவ நெருக்கத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் போர்ப்பயிற்சி இடம் பெறவுள்ளது என்றும் புதுடில்லி தெரிவித்துள்ளது.
இலங்கை இந்திய கூட்டுப் பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டுப் போர்ப் பயிற்சி ஆறு நாட்கள் நடைபெறவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இரு நாடுகளினதும் கடற்படைகள் சார்பில் குறைந்தது தலா நான்கு போர்க் கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. இதேவேளை, போர் ஒத்திகையில் பங்கேற்பதற்காக இலங்கை வரும் இந்தியப் போர்க் கப்பல்களில் இருக்கும் படையினர் திருகோணமலை நகருக்குள் வந்து நல்லெண்ண நடவடிக்கைகள் சிலவற்றிலும் ஈடுபடவுள்ளார்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ஆழ் டல் ரோந்து சேவை கப்பல்கள் இரண்டும், அதிவேக எறிகணைத் தாக்குதல் கப்பல் ஒன்றும், வேகத் தாக்குதல் ரோந்து கப்பபல்கள் ஆறும் இந்த பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய கடற்படை போரக் கப்பல்கள் இரண்டும், எறிகணை கப்பல் ஒன்றும், சரக்கு கப்பல் ஒன்றும், அதிவேக தாக்ககுதல் கப்பல்கள் இரண்டும், சமுத்திர கண்காணிப்பு விமானமொன்றும் இந்த பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளன.
கடற்படையினருக்கே உரித்தான தாக்குதல் வழிமுறைகள் தொடர்பாக இதன்போது பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடற்படையினருக்கே உரித்தான தாக்குதல் வழிமுறைகள் தொடர்பாக இதன்போது பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment