நடிகர் ஜான் ஆபிரகாமிற்கு திருமண ஆசை வந்துவிட்டது. பிபாஷா பாசுவின் காதலிலிருந்து சமீபத்தில்தான் விடுபட்ட நிலையில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று முதன்முறையாக தெரிவித்துள்ளார் ஆபிரகாம்.
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம். கை நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கிறார். ஜானும், நடிகை பிபாஷா பாசுவும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்மையில் தான் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு பிபாஷா டகுபதி ராணா, ஜாஷ் ஹார்ட்னெட், ஷாஹித் கபூருடன் நெருங்கிப் பழகுவதாக செய்திகள் வந்தன.
அதேபோல ஜானும் ஜெனிலியா, தீபிகா படுகோனே என நேரத்தை செலவிடுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் ஜானுக்கு திருமண ஆசை வந்துள்ளதாம். அதை அவரே தனது வாயால் தெரிவித்துள்ளார்.
பிபாஷா டக்குபதி, ஜாஷ், ஷாஹித் ஆகியோருடன் நெருக்கமாக உள்ளார் என்கிறார்களே, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு,
பிபாஷா எது செய்கிறாரோ அது அவருக்கு மகிழ்ச்சி அளித்தால் போதுமானது என்றார் நாசூக்காக. உங்க பேரு கூட தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து அடிபட்டதே என்றதற்கு, தீபிகா நல்ல தோழி. அவ்வளவு தான். இது போன்ற வதந்திகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அதில் என்னுடன் சேர்த்துப் பேசப்படும் பெண்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
அதை விடுங்க, யாரோ பிரியா மர்வா என்பவரை காதலிக்கிறீர்களாமே? பிரியா மர்வா என்று யாரும் இல்லை. அட்லீஸ்ட் என் வாழ்க்கையில் இல்லை என்றார்.
மறுபடியும் காதலில் விழுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
தாராளமா காதலில் விழுங்க, கல்யாணம் பண்ணுங்க, நல்லாருங்க...!
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம். கை நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கிறார். ஜானும், நடிகை பிபாஷா பாசுவும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்மையில் தான் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு பிபாஷா டகுபதி ராணா, ஜாஷ் ஹார்ட்னெட், ஷாஹித் கபூருடன் நெருங்கிப் பழகுவதாக செய்திகள் வந்தன.
அதேபோல ஜானும் ஜெனிலியா, தீபிகா படுகோனே என நேரத்தை செலவிடுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் ஜானுக்கு திருமண ஆசை வந்துள்ளதாம். அதை அவரே தனது வாயால் தெரிவித்துள்ளார்.
பிபாஷா டக்குபதி, ஜாஷ், ஷாஹித் ஆகியோருடன் நெருக்கமாக உள்ளார் என்கிறார்களே, அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு,
பிபாஷா எது செய்கிறாரோ அது அவருக்கு மகிழ்ச்சி அளித்தால் போதுமானது என்றார் நாசூக்காக. உங்க பேரு கூட தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து அடிபட்டதே என்றதற்கு, தீபிகா நல்ல தோழி. அவ்வளவு தான். இது போன்ற வதந்திகளைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அதில் என்னுடன் சேர்த்துப் பேசப்படும் பெண்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
அதை விடுங்க, யாரோ பிரியா மர்வா என்பவரை காதலிக்கிறீர்களாமே? பிரியா மர்வா என்று யாரும் இல்லை. அட்லீஸ்ட் என் வாழ்க்கையில் இல்லை என்றார்.
மறுபடியும் காதலில் விழுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
தாராளமா காதலில் விழுங்க, கல்யாணம் பண்ணுங்க, நல்லாருங்க...!
No comments:
Post a Comment