யாழ்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று சனிக்கிழமை யாழ்.பண்ணையில் சிறைச்சாலை மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் கயதீரவினால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சிறைச்சாலைக்கட்டிடத்தில் 2 ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.
யாழில் தற்போதைய சிறைச்சாலை 1996 ஆம் ஆண்டு அரசினால் தனியாரின் காணி குத்தகைக்கு எடுத்தே சிறைச்சாலை நடத்தப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ் நீதிபதிகள் மற்றும் சிறைச்சாலை அமைச்சின் உயர் அதிகாரிகள் யாழ்.மாவட்ட அரச அதிபர இமல்டா, யாழ்.வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி, யாழ்.சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டு வருடங்களில் இந்த சிறைச்சாலை கட்டிமுடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தச் சொகுசு தங்குமிடத்தில் தங்குவதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை மாறாக யாழில் என்ன தேவையோ அதை தேவைப்படுத்தாது.
மக்கள் மனதில் நிரந்த சிறைக்கும் உடல் சிறைக்கும் வல்லாதிக்கம் கொள்ள மில்லியன் கணக்கில் செலவீனப்படுத்தி நட முறைக்கு அத்தி வாரம் கொண்டுவர உள்ளது.
உண்மையிலே..
இந்த சிறைச்சாலைக்கு பணம் அனுப்பியது உலக வர்த்தக வங்கியும் பிற நாடும் தான். இது ஒரு கடனாக பெறப்பட்ட பணம். இதை எதற்காக வேண்டினார்..? என்ற விவாதம் எந்த நாடாள மன்றில் கேட்க முடியும்...?
இந்தப்பணம் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வசதிகள் அமைக்கவும் நாட்டில் அனைத்து வசதிகளையும் செய்யவும் தான் பணம் பெறப்பட்டது.
இன்று பணம் பெறப்பட்டது அதி உயர் யாழ்பாணத்தில் யாழ் மக்களுக்கு சிறைச்சாலைஅமைக்கத்தான் என்ற பொருளாக்கிவிட்டனர்.
என்ன தான் செய்ய முடியும்..? பட்டினியில் வாடி உயிரைத்தியாகம் செய்து உடலை விதைத்தது ஒரு அரக்கத்தனமானது என்று உலகம் எமக்கு அழித்த கொடுமையான பொய்கள் கலையும் வரை யாழ்பாணத்தில் குடிசைக்குப்பதிலாக சிறைச்சாலை தான் அமையும்.
இதை உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் நன்று.
No comments:
Post a Comment