யாழ் மானிப்பாய் சுதுமலைப் பகுதிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து 56 ரகத் துப்பாக்கிக்கு
பயன்படுத்தப்படும் வெடி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த 56 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் காவல் துறை தெரிவித்துள்ளனர்.
விசுவலிங்கம் ராயரெட்ணம் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்றிலிருந்தே ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாக விசேட கண்காணிக்கும் காவல்துறையினர்தெரிவித்தனர்.
உண்மையில் இந்த ரி56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் எவ்விதம் இந்த வீட்டுக்கு வந்தது தொடராபக பொலிஸார் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment