நூறு வீட்டுத் திட்டத்துக்காகக் கோணாவில் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள காணியிலிருக்கும் பாலை, முதிரை போன்ற பெறுமதியான முதிர்ந்த மரங்களைச் சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு பகல் என்று பாராமல் வெட்டி வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசினது 10 லட்சம் வீட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் பகுதியில் நூறு வீடுகள் அமைப்பதற்கு கிளிநொச்சி அரச அதிபரால் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குக் காணி வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் களுக்குரிய வீடுகளை விரைவாக அமைப்பதற்காக ஒதுக்கப் பட்ட காணிகள் விரைவாகத் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பிரதேசம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் அங்கிருக்கும் முதிர்ந்த பாலை, முதிரை போன்ற பெறுமதியான மரங்களைச் சிலர் இரவு பகலாக வெட்டி வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர்.
அரசுக்குச் சொந்தமான மரங்களைத் திருட்டுத்தனமாக வெட்டி ஏற்றிச் செல்வது குறித்துக் கவலையடைந்துள்ள பொதுமக்கள், சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த வீட்டுத் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்குத் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் 2 லட்சம் ரூபா கடனாகவும் ஒரு லட்சம் ரூபா மானியமாகவும் வழங்கப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக் கது.
No comments:
Post a Comment