முறிகண்டி பிரதேசத்தில் இருந்து மக்களை வேறு இடத்திற்கு குடியேற்றும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது.
இப்பகுதி மக்களை மக்கள் நடமாட்டம் குறைந்த பனிக்கன்குளம் பகுதியில் குடியேற்ற இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் தனிச்சிங்கள மொழியிலான கடிதங்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு இராணுவம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
யுத்தத்தின் பின்னர் அப்பிரதேசத்தில் குடியேற இராணுவம் அனுமதி மறுத்தே வருகிறது. இதனால் அம்மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment