மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மறைவிற்கு அவரது குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம் எனவும், அவர் கொலையாளி எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
பொப் இசை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கல் ஜாக்சன் (52) கடந்த 2009ம்ஆண்டு ஜுன் மாதம் 25ம் திகதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணை வீட்டில் காலமானார்.
அளவு அதிகமாக வலி நிவாரண மருந்து உட்கொண் டதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
ஜாக்சனின் குடும்ப மருத்துவராக கன்ட்ராட் முர்ரே என்பவர்தான், அவருக்கு சிகிச்சை அளித்தும், அவரது உடல் நிலையை கவனித்து வந்தார்.
அப்படியிருந்தும் ஜாக்சன் இறந்தார். இது தொடர்பாக கன்ட்ராட் முர்ரே மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஜாக்சன் இறப்பதற்கு முன்பு அவரை பரிசோதித்து சென்றார் முர்ரே. ஆயினும் வலிநிவாரண மருந்தினை உட்கொள்ள முர்ரே சொன்னதன் காரணமாக ஜாக்சன் இறந்தார்.
று வார காலமாக நடந்த இந்த வழக்கில் 45 பேர் சாட்சி அளித்தனர்.
300க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் மருத்து வருக்கு எதிராக இருந் தன. இதனை யடுத்து அவர் கொலை குற்ற வாளி என லொஸ் ஏஞ்சல்ஸ் நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. குற்றச் சாட்டை நீதிபதி மைக்கேல் பாஸ்டர் வாசித்தார்.
இதையடுத்து டொக்டர் முர்ரேவை பொலிஸ் கைது செய்துள்ளது. அவருக்கு பிணையும் மறுக்கப்பட்டுள்ளது.
பின்னர் நீதிமன்ற வளாகத்திலேயே அவரை பொலிஸார் கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர். இவர் மீதான தண்டனை விபரம் வரும் 29ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
No comments:
Post a Comment