நஷ்டத்தில் இயங்கும் அல்லது முறையாகச் செயற்படாத கம்பனிகளைப் பொறுப்பேற்கும் சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம் எந்தவொரு தனியார் நிறுவனத்தையும் சுவீகரிக்க எத்தனிக்கவில்லை. அவை தங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றத் தவறி தவறான வழியில் சென்றுகொண்டிருப்பதனால் நாம் இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டியிருந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரிமாளிகையில் தன்னைச் சந்தித்த உள்ளூர் வர்த்தகப் பிரமுகர்களுக்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நகல் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது சொத்துக்களைத் தவிர வேறு எந்த நிறுவனங்களுக்கும் இந்த உத்தேச சட்டத்தினால் பாதிப்பு ஏற்படாது என்றும் ஜனாதிபதி கூறினார். அங்கு ஜனாதிபதியிடம் கருத்துத் தெரிவித்த சில வர்த்தகப் பிரமுகர்கள் அரசாங்கத்தின் இந்த உத்தேச நடவடிக்கை குறித்து தவறான அபிப்பிராயம் மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி, தாங்கள் அரசாங்கத்தின் இந்த சுவீகரிப்பு நடவடிக்கையை எதிர்க்கவில்லையென்றும் கூறினார்கள்.
இந்த உத்தேச சட்டமூலம் குறித்து தாங்கள் வர்த்தக சம்மேளனங்களுடன் நீண்ட கருத்துப் பரிமாறல்களை நடத்தியதாகவும், அங்கு தாம் அரசாங்கம் பொதுமக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தாத வகையில் இந்த சட்ட நடவடிக்கையை எடுப்பது அவசியம் என்ற கோரிக்கையை அரசாங்கத்துக்கு விடுப்பது நல்லது என்று தீர்மானித் ததாகக் கூறினார்கள். இந்த வர்த்தகப் பிரமுகர்கள் நாட்டில் மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக வர்த்தகம் தொடர்பான சட்டங்களை காலத்துக்குக் காலம் மாற்றியமைப்பது அவசியம் என்ற கருத்தை ஜனாதிபதியிடம் முன்வைத்தார்கள். சரியான இலக்குகளுடன் செயற்படாத நிறுவனங்களுக்குக் கடந்த வரவு -செலவுத் திட்டத்தின் போது தாம் எச்சரிக்கை செய்திருந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவை தங்கள் பிழைகளை சீர்திருத்திக் கொள்வதற்குத் தங்கள் அப்போது ஓராண்டு காலம் அவகாசம் அளித்ததாகவும் கூறினார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், உற்பத்தித்திறனை அதி கரிப்பதற்கும், வேலைவாய்ப்பை உரு வாக்குவதற்கும் இந்த பொது சொத்துக்கள் தனியார் துறைக்கு கொடுக்கப்பட்டது என்றும் அவை சட்டவிரோதமான முறை யில் இலாபம் ஈட்டுவதற்காக செயற் பட்டதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்றும் கூறினார்.
சில நிறுவனங்கள் தங்களுக்கு விதிக் கப்பட்ட விதிமுறைகளுக்கு மாறாக 20 ஆண்டுகளுக்கும் கூடுதலாக செயற் பட்டதாகவும், அவற்றில் சில ஊழியர் சேமலாபநிதியம் தொடர்புடைய தொழில் சட்டங்களையும் மீறியிருப்பதாகவும் கூறினார்.
அரசாங்கத்தின் இந்தப் புதிய சட்டமூலத் தைக் கொண்டு வருவதற்குப் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இல்லை யெனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் காரணங்களை முன்வைத்து முக்கிய பொருளாதார தீர்மானங்களை எடுப்பது அவசியம் என்றும் கூறினார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அநுரபிரியதர்ஷன யாப்பா, பசில் ராஜ பக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, விமல் வீரவன்ச ஆகியோருடன், பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்த்தன, கொழும்பு மாநகரசபையின் எதிர்க் கட்சித் தலைவர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment