தமிழில் 'ஜே ஜே' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் அமோகா. இவர் தனது இயற்பெயரான நிஷா கோத்தாரி என்ற பெயரில் இந்தியில் நடித்து வந்தார். ராம் கோபால் வர்மா இயக்கிய இந்தி படங்களில் நடித்து வந்த இவர், இப்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஜீவா நடித்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். மும்பை ஓஷிவாராவில் வசித்து வரும் இவரது குடும்பம், தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிஷா, கடற்படையில் வேலை பார்க்கும் ஒருவரை சில வருடங்களாக காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்யப்போவதாக தனது தந்தை நிர்மல் குமாரிடம் சொன்னார். காதலர் தங்கள் பிரிவை சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் நிஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிஷாவை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. தங்களது சமூக சங்கத்துக்கும் இது தொடர்பாக நிஷாவின் பெற்றோர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுபற்றி நிஷாவிடம் கேட்டபோது, ''இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. தற்போது எனது பெற்றோருடன் டெல்லியில் இருக்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார். இதே போல நிஷாவின் தந்தை கூறும்போது, ''இது எங்கள் தனிப்பட்ட பிரச்னை. இதில் உண்மை இல்லை. சொசைட்டிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளதற்கு வேறு காரணங்கள் உள்ளன''என்றார்.
நிஷா தங்கியிருக்கும் ஓஷிவாரா சமர்தீப் அபார்ட்மென்ட் செயலாளர் கூறும்போது, ''நிஷாவின் தந்தை, ப்ளாட்டின் சாவியை தங்கள் குடும்பத்தினர் யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம், நீங்களே வைத்திருங்கள்' என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, என்னிடம் போன் செய்து அவரது மகள் நிஷாவின் திருமண கதையை சொன்னார். இந்த சம்பவத்துக்குப் பிறகு நிஷா இங்கு வருவதில்லை'' என்றார்.
நிஷா தங்கியிருக்கும் ஓஷிவாரா சமர்தீப் அபார்ட்மென்ட் செயலாளர் கூறும்போது, ''நிஷாவின் தந்தை, ப்ளாட்டின் சாவியை தங்கள் குடும்பத்தினர் யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம், நீங்களே வைத்திருங்கள்' என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, என்னிடம் போன் செய்து அவரது மகள் நிஷாவின் திருமண கதையை சொன்னார். இந்த சம்பவத்துக்குப் பிறகு நிஷா இங்கு வருவதில்லை'' என்றார்.
No comments:
Post a Comment