இலங்கையில் உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்துள்ளது.
அத்துடன் இவ் உதவியை நேரசியாகவே வழங்கும் பொருட்டு 1,000 கோடி ரூபா பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இவ்வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,000 வீடுகள் கட்டிக்கொடுக்க தீர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஓராண்டில் 52 வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாமதம் காரணமாக பணத்தை நேரடியாகவே வழங்க இந்திய அரசு தீர்மாணித்துள்ளது. இதன்படி ஒவ்வொருவருக்கும் தலா 5.5 இலட்சம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment