வாகனங்களில் ஓடும் போது ஆசனப் பட்டிகளை அணியாத சாரதிகளுக்கு, குற்றப் பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதாவது, ஆசன பட்டி அணியாத சாரதிகள், பொலிஸாரினால் நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆசனப் பட்டி அணியாத குற்றச்சாட்டின் பேரில் 140 க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.
பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் சாரதிகளின் பாதுகாப்பு கருதியுமே, ஆசன பட்டியை அணியுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment