பூமிக்கு அப்பால் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இல்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேற்றுக்கிரக வாசிகள் குறித்து அரசு பொறுப்புக் கூறவேண்டும் என ஆயிரக் கணக்கான அமெரிக்கர்கள் மனுத் தாக்கல் செய்த நிலையிலேயே வெள்ளை மாளிகை வழமைக்கு மாறான இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மனுவொன்றில், வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்களை அமெரிக்க அரசு அம்பலப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று மற்றுமொரு மனுவில் 12,000 பேர் கையொப்பமிட்டு வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கைகள் தொடர்பான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை. எந்த மனிதரிடமும் வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பு வைத்ததற்கான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது
அத்துடன் இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment