சென்னை: எஸ்எஸ் ஆர் என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால், அவரது முதுகு தண்டில் அடிபட்டிருந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றபின் குணமடைந்தார்.
இந்நிலையில் அவருடைய முதுகு தண்டில் மீண்டும் வலி ஏற்பட்டது. இதையொட்டி, இன்று சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகு எலும்பு தேய்ந்திருப்பதால், அதனை அறுவைச் சிகிச்சை மூலம் சரிப்படுத்த மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர் எஸ்எஸ்ஆர். தீவிர அரசியலில் பங்கெடுத்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால், அவரது முதுகு தண்டில் அடிபட்டிருந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றபின் குணமடைந்தார்.
இந்நிலையில் அவருடைய முதுகு தண்டில் மீண்டும் வலி ஏற்பட்டது. இதையொட்டி, இன்று சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகு எலும்பு தேய்ந்திருப்பதால், அதனை அறுவைச் சிகிச்சை மூலம் சரிப்படுத்த மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர் எஸ்எஸ்ஆர். தீவிர அரசியலில் பங்கெடுத்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இப்போது அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment