ஷாரூக்கான் தந்த காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ கார் பரிசை அன்புடன் மறுத்துவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஷாரூக்கான் நடித்து தீபாவளி அன்று வெளியான படம் 'ரா 1'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் தோன்ற வேோண்டும் என விரும்பிய ஷாரூக்கான், அதற்காக அவரை அணுகினார். தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், மும்பைக்கே போய் அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி.
ரஜினி ஒரு காட்சியில் தோன்றுகிறார் என்பதற்காகவே, இந்தப் படத்தை பெரும்பாலான ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்தனர். இதனால் தென்னிந்தியாவிலும் நல்ல ஆரம்ப வசூலைப் பெற்றது ரா ஒன்.
எனவே தனக்காக நடித்த ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக, காஸ்ட்லியான 'பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்' காரை பரிசாக தருவதாக அறிவித்தார்.
ஆனால், புகழச்சி மற்றும் பரிசுகளை விரும்பாத சூப்பர் ஸ்டார், 'ஆடம்பர கார்களை நான் பயன்படுத்துவதே இல்லை. எனவே எனக்கு இந்த பரிசு வேண்டாம்' என அன்போடு மறுத்துவிட்டார்.
மேலும், 'உங்கள் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உங்கள் அன்பிற்கு நன்றி' என ஷாரூக்கானிடம் கூறினார்.
ரஜினியின் இந்த பதில் ஷாரூக்கானை மலைக்க வைத்துவிட்டது. "இப்படியொரு எளிமையான மனிதரை நான் திரையுலகில் கண்டதில்லை. ரஜினியின் அன்பு என்னை கண்கலங்க வைத்தவிட்டது," என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஷாரூக்கான் நடித்து தீபாவளி அன்று வெளியான படம் 'ரா 1'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் தோன்ற வேோண்டும் என விரும்பிய ஷாரூக்கான், அதற்காக அவரை அணுகினார். தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், மும்பைக்கே போய் அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார் ரஜினி.
ரஜினி ஒரு காட்சியில் தோன்றுகிறார் என்பதற்காகவே, இந்தப் படத்தை பெரும்பாலான ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்தனர். இதனால் தென்னிந்தியாவிலும் நல்ல ஆரம்ப வசூலைப் பெற்றது ரா ஒன்.
எனவே தனக்காக நடித்த ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக, காஸ்ட்லியான 'பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்' காரை பரிசாக தருவதாக அறிவித்தார்.
ஆனால், புகழச்சி மற்றும் பரிசுகளை விரும்பாத சூப்பர் ஸ்டார், 'ஆடம்பர கார்களை நான் பயன்படுத்துவதே இல்லை. எனவே எனக்கு இந்த பரிசு வேண்டாம்' என அன்போடு மறுத்துவிட்டார்.
மேலும், 'உங்கள் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உங்கள் அன்பிற்கு நன்றி' என ஷாரூக்கானிடம் கூறினார்.
ரஜினியின் இந்த பதில் ஷாரூக்கானை மலைக்க வைத்துவிட்டது. "இப்படியொரு எளிமையான மனிதரை நான் திரையுலகில் கண்டதில்லை. ரஜினியின் அன்பு என்னை கண்கலங்க வைத்தவிட்டது," என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment