சென்னை: பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உரிய கடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பிறகும், கூடுதலாக 25 லட்சம் ரூபாய் கேட்டு சித்ரவதை செய்வதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீசில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணி ஏற்றுமதியாளர் ஷேக் மதார் கந்து வட்டி புகார் கொடுத்துள்ளார். 30 லட்சம் ரூபாய் கடனுக்கு அசல், வட்டியோடு ரூ.32 லட்சம் தந்தபிறகும் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரூ.25 லட்சம் கேட்டு மன்சூர் அலிகான் தம்மை சித்தரவதை செய்தார் என்றும் அவர் அவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சூர் அலிகான், தம்மிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தராமல் தப்பிக்கவே ஷேக் மதார் தவறான புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். பண விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த புகார் குறித்து ஷேக் மாதரை ஏற்கனவே அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிய கடன் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பிறகும், கூடுதலாக 25 லட்சம் ரூபாய் கேட்டு சித்ரவதை செய்வதாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணி வியாபாரி ஒருவர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் திரைப்பட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீசில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த துணி ஏற்றுமதியாளர் ஷேக் மதார் கந்து வட்டி புகார் கொடுத்துள்ளார். 30 லட்சம் ரூபாய் கடனுக்கு அசல், வட்டியோடு ரூ.32 லட்சம் தந்தபிறகும் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரூ.25 லட்சம் கேட்டு மன்சூர் அலிகான் தம்மை சித்தரவதை செய்தார் என்றும் அவர் அவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்சூர் அலிகான், தம்மிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தராமல் தப்பிக்கவே ஷேக் மதார் தவறான புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். பண விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த புகார் குறித்து ஷேக் மாதரை ஏற்கனவே அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment