நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்களால் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைபின் உறுப்பினர் குமரன் உரை நிகழ்த்தினார்.
இவர் தனது உரையில் தமிழர் மண்ணின் மைந்தர்களாகிய மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் உங்களது குழந்தைகள் எமது தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள்.
இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த நீங்கள் நிச்சயம் பெருமைகொள்ளவேண்டும் என்றும்.
கடைசி தமிழன் உள்ளவரைகலக்கமின்றி போற்றுவன் உங்களை என்று தனது கருத்துரையில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment