
தமிழீழ தேசியத் தலைவரின் 57 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் மக்கள் கொண்டாடியுள்ளனர்.தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன் பல இந்து ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூசைகள் நடைபெற்றன. இப் பூசைகளிலும் மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் இந்நிகழ்வுகள் இடம் பெற்றன.
மேற்படி நிகழ்வுகள் தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் அவரின் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டன.
ஓடடுக்குழுக்களான கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் சிறிலங்கா படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் தேசியத் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் தேசியத் தலைவர் நிறைந்திருப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய தினம் மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
திடீரென பல இடங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment