2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ சபையில் நிகழ்த்திய போது ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து அமைச்சர்களாலும் அரச தரப்பு எம்.பி.க்களினாலும் ஐ.தே.க.வின் சிரேஷ்ட தலைவர்கள் உட்பட பலர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதனால் 10 நிமிடங்கள் வரை சபை பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
அரச தரப்பிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கிப் பாய்ந்த தண்ணீர்ப் போத்தல்கள், புத்தகங்களினாலும் சாரி சாரியாகப் பாய்ந்து சென்று தாக்கிய அமைச்சர்களினாலும் சபை போர்க்களமாக மாறியது.
தமது தரப்பினைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி பல தடவைகள் கடும் முயற்சி எடுத்த போதும் எதுவும் கைகூடவில்லை. அமைதியாக இருக்குமாறு கடும் தொனியில் அவர் உத்தரவிட்டபோதும் அரச தரப்பினர் எவரும் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத நிலையில் அரச தரப்பினர் வீசிய போத்தல்கள் ஜனாதிபதிக்கும் அருகில் வந்து விழுந்ததால் ஜனாதிபதியை சுற்றி படைக்கல சேவிதர்களும் உதவியாளர்களும் பாதுகாத்து நின்றனர்.
எதிர்க்கட்சியை சீண்டிய ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 1978 ஆம் ஆண்டுக்கு பின்னரே நாட்டில் மிகமோசமான நிலை ஏற்பட்டதாகவும் இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களே காரணமெனவும் கூறினார். இதற்கு ஐ.தே.க. வினர் "கூ' அடித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். ஜனாதிபதி தனது வரவுசெலவுத் திட்ட உரையை அடிக்கடி நிறுத்தி எதிர்க்கட்சியினரை சீண்டும் வகையிலும் சவால் விடும் வகையிலும் கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதற்கு ஐ.தே.க. வினர் எதிர்ப்பையும் அரச தரப்பினர் கரகோஷத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு
தேர்தலை நடத்தத்தயார்
இதில் ஒரு கட்டமாக அடுத்து வரும் வருடங்களில் தேர்தல்கள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சி விரும்பினால் நான் இந்தப் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு நாளையே தேர்தலை நடத்தத் தயாராகவுள்ளேன். இதற்கு எதிர்க்கட்சியினர் தயாரா? எந்த சவாலுக்கும் நான் தயார் என ஜனாதிபதி கூறிய போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு பதில் கருத்துகளைக் கூற முயன்றனர்.
மோதல் வெடித்தது
ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சியினர் தாம் தயாராக வைத்திருந்த சுலோக அட்டைகளை தூக்கிப் பிடித்தவாறு எழுந்து நின்றனர். அந்த சுலோக அட்டைகளில் "வெட்கம்', "பகற் கொள்ளை', "பட்ஜெட் குப்பைத் தொட்டிக்குள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. எதிர்க்கட்சியினர் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எழுந்து நின்றபோது அதனைப் பொருட்படுத்தாத ஜனாதிபதி சிரித்தவாறே தனது உரையைத் தொடர்ந்தார்.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் பின்பக்க ஆசனத்திலிருந்த அரச தரப்பு எம்.பி.யான றொகான் ரத்வத்த திடீரென பாய்ந்து வந்து எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்கவின் நெஞ்சில் பிடித்துத் தள்ளி விட்டு அவரின் கையிலிருந்த சுலோக அட்டையைப் பறித்துச் சென்றார். இதனையடுத்து இருபக்கமுமிருந்து பாய்ந்து வந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அரச தரப்பு எம்.பி.க்கள் ஐ.தே.க.வின் வசமிருந்த சுலோக அட்டைகளைப் பறித்ததுடன் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தினர்.
சிரேஷ்ட தலைவர்கள்
மீது தாக்குதல்
கும்பலாக வந்து எதிர்க்கட்சி வரிசைக்குள் நுழைந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தாக்கினர். ஜோன் அமரதுங்கவைப் பாதுகாக்க முயன்ற ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. மீது அரச தரப்பு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து அவரும் பதில் தாக்குதலில் இறங்கவே எதிர்க்கட்சி வரிசைக்குள் பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இன்னும் பலர் ஒருவரின் சட்டையை இன்னொருவர் பிடித்து இழுபறியில் ஈடுபட்டனர்.
ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி., ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. ஆகியோர் அமைச்சர்களின் தாக்குதலுக்குள்ளாகினர். முன் வரிசையில் உள்ள அரச தரப்பினராலும் எதிர்க்கட்சியின் பின் வரிசையில் இருந்த அரச தரப்பு உறுப்பினர்களாலும் ஐ.தே.க.வினர் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டனர். ஐ.தே.க.வின் இளம் எம்.பி.க்கள் பதில் தாக்குதலில் இறங்கிய போதும் சிரேஷ்ட உறுப்பினர்கள் திகைப்படைந்திருந்தனர்.
பறந்து வந்த
போத்தல்கள், புத்தகங்கள்
எதிர்க்கட்சி வரிசைக்குள் மோதல் வெடித்த நிலையில் அரச தரப்பினர் பக்கமிருந்து தண்ணீர்ப் போத்தல்களும் புத்தகங்களும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சிரேஷ்ட தலைவர்களை நோக்கி வீசப்பட்டன. அடுத்தடுத்து வந்து விழுந்த போத்தல்கள், புத்தகங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஐ.தே.க.வினர் சிரமப்படவேண்டியிருந்தது. சில அமைச்சர்கள் எதிர்க்கட்சி வரிசைக்குள் நுழைந்து அவர்களின் மேசையில் இருந்த ஆவணங்கள், புத்தகங்கள், கண்ணாடிகளை தூக்கி சபைக்கு நடுவே வீசினர். அமைச்சர் மேர்வின் சில்வா கருஜயசூரியாவை தாக்குவதற்கு பல தடவைகள் முயன்று கொண்டிருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வா கூட களத்தில் இறங்கினார். இரு தரப்புக்குமிடையிலான மோதலினால் சபை அல்லோலகல்லோலப் பட்டது.
ஜனாதிபதிக்கு அருகில்
விழுந்த தண்ணீர்ப் போத்தல்
அரச தரப்பினர் கண்மூடித்தனமாக நடத்திய போத்தல் வீச்சினால் ஜனாதிபதிக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியை நோக்கி வீசிய தண்ணீர்ப் போத்தலொன்று இலக்குத் தவறி ஜனாதிபதியின் தலைக்கு மேலால் வந்து அவருக்கு அருகில் விழுந்து தண்ணீர் சிதறியது. இதனால் ஜனாதிபதியும் அவருக்கு அருகில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். கலரியிலிருந்து தண்ணீர் போத்தல் வீசப்பட்டதாகக் கருதிய ஜனாதிபதி உடனடியாக படைக்கல சேவிதர்களை அழைத்து ஏதோ கூறியதையடுத்து படைக்கல சேவிதர்கள் கலரிக்கு விரைந்து ஆராய்ந்தனர். ஆனால் போத்தல் அரச தரப்பின் பின் வரிசைப் பக்கமிருந்தே வீசப்பட்டது.
ஜனாதிபதியால் கூட
கட்டுப்படுத்த முடியவில்லை
எதிர்க்கட்சியுடனான முறுகலை முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஜனாதிபதி அது உக்கிரமடைந்து மோதலாக மாறியதால் அதிர்ச்சியடைந்து காணப்பட்டார். அத்துடன் மோதலில் ஈடுபட்ட தமது தரப்பினரைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் எடுத்த பிரயத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. தமது உறுப்பினர்களுக்கு கடும் தொனியில் உத்தரவிட்டபோது கூட எவரும் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாது எதிர்க்கட்சியினரை தாக்குவதிலேயே குறியாகவிருந்தனர்.
அவர்களை சுலோக அட்டைகளைப் பிடிக்க விடுங்கள். அவர்கள் சிறிது நேரத்தில் ஓய்ந்து விடுவார்கள் என்று கூறிய ஜனாதிபதி மேலே ஊடகவியலாளர்களையும் புகைப்படப்பிடிப்பாளர்களையும் நோக்கி அவர்கள் புகைப்படங்களுக்குத் தான் ஆசைப்படுகின்றனர். எனவே எதிர்க்கட்சியினரை வடிவாகப் புகைப்படங்கள் எடுங்கள் என்று அடிக்கடி கூறினார். அத்துடன் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடமளிக்குமாறும் தமது உறுப்பினர்களுக்கு கூறினார். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
சபாநாயகர் கடும் எச்சரிக்கை
எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். உறுப்பினர்களை அவர் எச்சரித்த போதும் எதுவும் எடுபடவில்லை. சபைக்குக் குறுக்காகச் செல்வோர், நடமாடுவோர் வெளியேற்றப்படுவார்கள் என்று சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் யாரும் அதனைக் கேட்கவில்லை. கையில் அகப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களையெல்லாம் தாக்கிவிட வேண்டும் என்ற ஆவேசத்திலேயே ஒவ்வொருவரும் சபைக்கு குறுக்காக பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். மூத்த அமைச்சர்கள் கூட தம்மை மறந்தவர்களாக யுத்த சன்னதம் ஆடினார்கள். சபை கூச்சல், குழப்பங்கள், சபைக்குதவாத வார்த்தைகளால் அதிர்ந்தது. அரச தரப்பு பெண் எம்.பி.க்கள் இருந்த அதேவேளை ஐ.தே.க.வின் பெண் எம்.பி.க்கள் தமது உறுப்பினர்களைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க போராடிக் கொண்டிருந்தனர். மோதல்களுக்கு குறுக்காக நின்று விலக்குப் பிடித்தனர்.
அதிர்ச்சியில் வெளிநாட்டு
தூதுவர்கள், இராஜதந்திரிகள்
மிகவும் கலகலப்பாக போய்க்கொண்டிருந்த வரவுசெலவுத் திட்ட உரை நிகழ்வு திடீரென போர்க்களமாக மாறியதுடன் அரங்குகளில் வன்முறைகள், தாக்குதல்கள், தண்ணீர் போத்தல், புத்தக வீச்சுகள், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதிய விதம் என்பவற்றைப் பார்த்த வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் மிகவும் அதிர்ச்சியடைந்தவர்களாகக் காணப்பட்டனர். தாம் இருந்த ஆசனங்களின் நுனியில் அமர்ந்தவாறு கீழே எட்டிப்பார்த்து பதற்றமாக ஏதோ உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களைப் போன்றே கலரியில் அமர்ந்திருந்த மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள்,அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் என ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
ஐ.தே.க.வினர்
வெளிநடப்பு
2.15 மணிக்கு தொடங்கிய மோதல் 2.25 மணி வரை தொடர்ந்தது. இதில் தமது சிரேஷ்ட தலைவர்கள் பலர் தாக்கப்பட்டதனால் கோபமடைந்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய ஐ.தே.க. உறுப்பினரும் வெளிநடப்புச் செய்தனர். இதன் பின்னர் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இல்லாமலேயே ஜனாதிபதி தனது உரையைத் தொடர்ந்தார். நான் பலமானதொரு எதிர்க்கட்சி வேண்டும் என விரும்பினேன். ஆனால் நாம் அப்படி பலமானவர்கள் இல்லையென்பதை நிரூபித்துவிட்டு ஐ.தே.க.வினர் வெளியேறிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். அதன் பின்னர் உரை களையிழந்தே காணப்பட்டது.
தனது தும்மலுக்கு
விளக்கமளித்த ஜனாதிபதி
வரவுசெலவுத் திட்ட உரையை தொடர்ந்து கொண்டிருந்த ஜனாதிபதி இடையே பலமாகத் தும்மினார். பின்னர் சிரித்தவாறு வெளியேறிச் சென்ற ஐ.தே.க.வினர் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நாம் வெளியேறாமல் எனது உரையை கேட்டுக் கொண்டிருந்திருக்கலாமென நினைக்கின்றனர். அதனால் தான் எனக்கு தும்மல் ஏற்பட்டது என ஜனாதிபதி கூறியபோது சிரிப்பால் சபையே அதிர்ந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினரும் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுடன் ஜனாதிபதியின் உரையையும் இறுதி வரை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
(தினக்குரல்)
அரச தரப்பிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கிப் பாய்ந்த தண்ணீர்ப் போத்தல்கள், புத்தகங்களினாலும் சாரி சாரியாகப் பாய்ந்து சென்று தாக்கிய அமைச்சர்களினாலும் சபை போர்க்களமாக மாறியது.
தமது தரப்பினைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி பல தடவைகள் கடும் முயற்சி எடுத்த போதும் எதுவும் கைகூடவில்லை. அமைதியாக இருக்குமாறு கடும் தொனியில் அவர் உத்தரவிட்டபோதும் அரச தரப்பினர் எவரும் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத நிலையில் அரச தரப்பினர் வீசிய போத்தல்கள் ஜனாதிபதிக்கும் அருகில் வந்து விழுந்ததால் ஜனாதிபதியை சுற்றி படைக்கல சேவிதர்களும் உதவியாளர்களும் பாதுகாத்து நின்றனர்.
எதிர்க்கட்சியை சீண்டிய ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 1978 ஆம் ஆண்டுக்கு பின்னரே நாட்டில் மிகமோசமான நிலை ஏற்பட்டதாகவும் இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களே காரணமெனவும் கூறினார். இதற்கு ஐ.தே.க. வினர் "கூ' அடித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். ஜனாதிபதி தனது வரவுசெலவுத் திட்ட உரையை அடிக்கடி நிறுத்தி எதிர்க்கட்சியினரை சீண்டும் வகையிலும் சவால் விடும் வகையிலும் கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார். இதற்கு ஐ.தே.க. வினர் எதிர்ப்பையும் அரச தரப்பினர் கரகோஷத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு
தேர்தலை நடத்தத்தயார்
இதில் ஒரு கட்டமாக அடுத்து வரும் வருடங்களில் தேர்தல்கள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சி விரும்பினால் நான் இந்தப் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு நாளையே தேர்தலை நடத்தத் தயாராகவுள்ளேன். இதற்கு எதிர்க்கட்சியினர் தயாரா? எந்த சவாலுக்கும் நான் தயார் என ஜனாதிபதி கூறிய போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு பதில் கருத்துகளைக் கூற முயன்றனர்.
மோதல் வெடித்தது
ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்ட எதிர்க்கட்சியினர் தாம் தயாராக வைத்திருந்த சுலோக அட்டைகளை தூக்கிப் பிடித்தவாறு எழுந்து நின்றனர். அந்த சுலோக அட்டைகளில் "வெட்கம்', "பகற் கொள்ளை', "பட்ஜெட் குப்பைத் தொட்டிக்குள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. எதிர்க்கட்சியினர் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு எழுந்து நின்றபோது அதனைப் பொருட்படுத்தாத ஜனாதிபதி சிரித்தவாறே தனது உரையைத் தொடர்ந்தார்.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் பின்பக்க ஆசனத்திலிருந்த அரச தரப்பு எம்.பி.யான றொகான் ரத்வத்த திடீரென பாய்ந்து வந்து எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்கவின் நெஞ்சில் பிடித்துத் தள்ளி விட்டு அவரின் கையிலிருந்த சுலோக அட்டையைப் பறித்துச் சென்றார். இதனையடுத்து இருபக்கமுமிருந்து பாய்ந்து வந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அரச தரப்பு எம்.பி.க்கள் ஐ.தே.க.வின் வசமிருந்த சுலோக அட்டைகளைப் பறித்ததுடன் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தினர்.
சிரேஷ்ட தலைவர்கள்
மீது தாக்குதல்
கும்பலாக வந்து எதிர்க்கட்சி வரிசைக்குள் நுழைந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தாக்கினர். ஜோன் அமரதுங்கவைப் பாதுகாக்க முயன்ற ஹரீன் பெர்னாண்டோ எம்.பி. மீது அரச தரப்பு உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து அவரும் பதில் தாக்குதலில் இறங்கவே எதிர்க்கட்சி வரிசைக்குள் பயங்கர மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இன்னும் பலர் ஒருவரின் சட்டையை இன்னொருவர் பிடித்து இழுபறியில் ஈடுபட்டனர்.
ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி., ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. ஆகியோர் அமைச்சர்களின் தாக்குதலுக்குள்ளாகினர். முன் வரிசையில் உள்ள அரச தரப்பினராலும் எதிர்க்கட்சியின் பின் வரிசையில் இருந்த அரச தரப்பு உறுப்பினர்களாலும் ஐ.தே.க.வினர் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டனர். ஐ.தே.க.வின் இளம் எம்.பி.க்கள் பதில் தாக்குதலில் இறங்கிய போதும் சிரேஷ்ட உறுப்பினர்கள் திகைப்படைந்திருந்தனர்.
பறந்து வந்த
போத்தல்கள், புத்தகங்கள்
எதிர்க்கட்சி வரிசைக்குள் மோதல் வெடித்த நிலையில் அரச தரப்பினர் பக்கமிருந்து தண்ணீர்ப் போத்தல்களும் புத்தகங்களும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சிரேஷ்ட தலைவர்களை நோக்கி வீசப்பட்டன. அடுத்தடுத்து வந்து விழுந்த போத்தல்கள், புத்தகங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஐ.தே.க.வினர் சிரமப்படவேண்டியிருந்தது. சில அமைச்சர்கள் எதிர்க்கட்சி வரிசைக்குள் நுழைந்து அவர்களின் மேசையில் இருந்த ஆவணங்கள், புத்தகங்கள், கண்ணாடிகளை தூக்கி சபைக்கு நடுவே வீசினர். அமைச்சர் மேர்வின் சில்வா கருஜயசூரியாவை தாக்குவதற்கு பல தடவைகள் முயன்று கொண்டிருந்தார். சபை முதல்வரான நிமால் சிறிபால டி சில்வா கூட களத்தில் இறங்கினார். இரு தரப்புக்குமிடையிலான மோதலினால் சபை அல்லோலகல்லோலப் பட்டது.
ஜனாதிபதிக்கு அருகில்
விழுந்த தண்ணீர்ப் போத்தல்
அரச தரப்பினர் கண்மூடித்தனமாக நடத்திய போத்தல் வீச்சினால் ஜனாதிபதிக்கும் பாதிப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சியை நோக்கி வீசிய தண்ணீர்ப் போத்தலொன்று இலக்குத் தவறி ஜனாதிபதியின் தலைக்கு மேலால் வந்து அவருக்கு அருகில் விழுந்து தண்ணீர் சிதறியது. இதனால் ஜனாதிபதியும் அவருக்கு அருகில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். கலரியிலிருந்து தண்ணீர் போத்தல் வீசப்பட்டதாகக் கருதிய ஜனாதிபதி உடனடியாக படைக்கல சேவிதர்களை அழைத்து ஏதோ கூறியதையடுத்து படைக்கல சேவிதர்கள் கலரிக்கு விரைந்து ஆராய்ந்தனர். ஆனால் போத்தல் அரச தரப்பின் பின் வரிசைப் பக்கமிருந்தே வீசப்பட்டது.
ஜனாதிபதியால் கூட
கட்டுப்படுத்த முடியவில்லை
எதிர்க்கட்சியுடனான முறுகலை முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஜனாதிபதி அது உக்கிரமடைந்து மோதலாக மாறியதால் அதிர்ச்சியடைந்து காணப்பட்டார். அத்துடன் மோதலில் ஈடுபட்ட தமது தரப்பினரைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் எடுத்த பிரயத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. தமது உறுப்பினர்களுக்கு கடும் தொனியில் உத்தரவிட்டபோது கூட எவரும் அதனைக் காதில் வாங்கிக் கொள்ளாது எதிர்க்கட்சியினரை தாக்குவதிலேயே குறியாகவிருந்தனர்.
அவர்களை சுலோக அட்டைகளைப் பிடிக்க விடுங்கள். அவர்கள் சிறிது நேரத்தில் ஓய்ந்து விடுவார்கள் என்று கூறிய ஜனாதிபதி மேலே ஊடகவியலாளர்களையும் புகைப்படப்பிடிப்பாளர்களையும் நோக்கி அவர்கள் புகைப்படங்களுக்குத் தான் ஆசைப்படுகின்றனர். எனவே எதிர்க்கட்சியினரை வடிவாகப் புகைப்படங்கள் எடுங்கள் என்று அடிக்கடி கூறினார். அத்துடன் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடமளிக்குமாறும் தமது உறுப்பினர்களுக்கு கூறினார். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
சபாநாயகர் கடும் எச்சரிக்கை
எதிர்க்கட்சியினர் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். உறுப்பினர்களை அவர் எச்சரித்த போதும் எதுவும் எடுபடவில்லை. சபைக்குக் குறுக்காகச் செல்வோர், நடமாடுவோர் வெளியேற்றப்படுவார்கள் என்று சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் யாரும் அதனைக் கேட்கவில்லை. கையில் அகப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களையெல்லாம் தாக்கிவிட வேண்டும் என்ற ஆவேசத்திலேயே ஒவ்வொருவரும் சபைக்கு குறுக்காக பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். மூத்த அமைச்சர்கள் கூட தம்மை மறந்தவர்களாக யுத்த சன்னதம் ஆடினார்கள். சபை கூச்சல், குழப்பங்கள், சபைக்குதவாத வார்த்தைகளால் அதிர்ந்தது. அரச தரப்பு பெண் எம்.பி.க்கள் இருந்த அதேவேளை ஐ.தே.க.வின் பெண் எம்.பி.க்கள் தமது உறுப்பினர்களைத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க போராடிக் கொண்டிருந்தனர். மோதல்களுக்கு குறுக்காக நின்று விலக்குப் பிடித்தனர்.
அதிர்ச்சியில் வெளிநாட்டு
தூதுவர்கள், இராஜதந்திரிகள்
மிகவும் கலகலப்பாக போய்க்கொண்டிருந்த வரவுசெலவுத் திட்ட உரை நிகழ்வு திடீரென போர்க்களமாக மாறியதுடன் அரங்குகளில் வன்முறைகள், தாக்குதல்கள், தண்ணீர் போத்தல், புத்தக வீச்சுகள், உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மோதிய விதம் என்பவற்றைப் பார்த்த வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் மிகவும் அதிர்ச்சியடைந்தவர்களாகக் காணப்பட்டனர். தாம் இருந்த ஆசனங்களின் நுனியில் அமர்ந்தவாறு கீழே எட்டிப்பார்த்து பதற்றமாக ஏதோ உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களைப் போன்றே கலரியில் அமர்ந்திருந்த மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள்,அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் என ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
ஐ.தே.க.வினர்
வெளிநடப்பு
2.15 மணிக்கு தொடங்கிய மோதல் 2.25 மணி வரை தொடர்ந்தது. இதில் தமது சிரேஷ்ட தலைவர்கள் பலர் தாக்கப்பட்டதனால் கோபமடைந்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய ஐ.தே.க. உறுப்பினரும் வெளிநடப்புச் செய்தனர். இதன் பின்னர் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இல்லாமலேயே ஜனாதிபதி தனது உரையைத் தொடர்ந்தார். நான் பலமானதொரு எதிர்க்கட்சி வேண்டும் என விரும்பினேன். ஆனால் நாம் அப்படி பலமானவர்கள் இல்லையென்பதை நிரூபித்துவிட்டு ஐ.தே.க.வினர் வெளியேறிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். அதன் பின்னர் உரை களையிழந்தே காணப்பட்டது.
தனது தும்மலுக்கு
விளக்கமளித்த ஜனாதிபதி
வரவுசெலவுத் திட்ட உரையை தொடர்ந்து கொண்டிருந்த ஜனாதிபதி இடையே பலமாகத் தும்மினார். பின்னர் சிரித்தவாறு வெளியேறிச் சென்ற ஐ.தே.க.வினர் தன்னையே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நாம் வெளியேறாமல் எனது உரையை கேட்டுக் கொண்டிருந்திருக்கலாமென நினைக்கின்றனர். அதனால் தான் எனக்கு தும்மல் ஏற்பட்டது என ஜனாதிபதி கூறியபோது சிரிப்பால் சபையே அதிர்ந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினரும் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுடன் ஜனாதிபதியின் உரையையும் இறுதி வரை அவதானித்துக் கொண்டிருந்தனர்.
(தினக்குரல்)
No comments:
Post a Comment