இந்திய மீனவர்கள் விவகாரத்தில் கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஆருண் கூறியுள்ளார்.ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜே.எம். ஆருண் கூறியதாவது:
சர்வதேச கடல் விதிமுறைகளின்படி, மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிக்கலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. இதனிடையே, கடற்கொள்ளையர்கள் போல இலங்கை கடற்படை நடந்து கொள்ளக் கூடாது.
இலங்கை படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
1974-ல் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு முழு உரிமை உள்ளது.
இவ்வாறு ஜே.எம். ஆருண் தெரிவித்தார்.


No comments:
Post a Comment