போர்க் குற்றங்களை விசாரிக்கும்படி வெளி உலக அழுத்தங்கள் கொழும்பு அரசு மீது குவிந்து வருகின்ற நிலையிலும், உலகுடன் மோதுவதற்கு இலங்கை ஒருபோதும் அஞ்சாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இந்த நெருக்குவாரங்கள் எல்லாம், 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டுவரும் நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கும் சதிகாரர்களின் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“போர்க்களத்தில் தோற்றவர்கள் இலங்கைப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்குச் சர்வதேசத்துடன் இணைந்து சதி செய்கிறார்கள்” என்றார் பீரிஸ். ஜனாதிபதியின் ரஷ்யப் பயணம் தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு விளக்கும் சந்திப்பை வெளிவிவகார அமைச்சர் நேற்று நடத்தினார். இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்த்தும் நோக்கிலேயே போலியான போர்க் குற்றச்சாட்டுக்காட்சிகளை சனல்4 தொலைக்காட்சி அவ்வப்போது வெளியிட்டு வருகின்றது என்று அமைச்சர் அப்போது சொன்னார்.
போர்முனையில் நடந்த சண்டை இப்போது அனைத்துலக இராஜதந்திர மட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். இலங்கை தனித்து விடப்படவில்லை என்றும் சீனா, ரஷ்யா போன்ற நாடு களின் பலமான ஆதரவு இலங்கைக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
“இலங்கைக்கு எதிரான, அரசியல் நோக்கங் கொண்ட பொய்ப் பரப்புரைகள் அனைத்தும் தோல்வியடையும். இந்த விடயத்தில் உலகுடன் மோது வதற்கும் நாம் பயப்படவில்லை” என்றார் பீரிஸ்.செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்களில் தெரிவித்ததாவது:
ஊடகவியலாளர்: இலங்கை போர்க்குற்றம் எனக் கூறப்படும் வீடியோக்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ரீதியில் இலங்கை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெளிவிவகார அமைச்சு என்ற வகையில் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
அமைச்சர்: இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கான சதி முயற்சியே இது. இந்த வீடியோக்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவற்றின் ஒளி மற்றும் காட்சி (Audio,Visual) மற்றும் பின்னணி (Background) ஆகியவற்றை நோக்கும்போது போலி என்றே கூறலாம். இது தொடர்பாக விமர்சனங்களை அமைப்புகளுக்கும் இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கும்படி பாதுகாப்பு அமைச்சும், நல்லிணக்க ஆணைக்குழுவும் அழைப்பு விடுத்தன.எனினும், அந்த அழைப்பு நிராகரிக்கப்பட்டது. பொய்யான தகவல்களை முன்வைத்து சிலரது நிழல்களின் கீழ் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது முதலாவது, இரண்டாவது தடவையல்ல. இலங்கைக்குத் தொடர்ந்தும் “ஜி.எஸ்.பி. பிளஸ்” வரிச்சலுகை வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு பிரஸல்ஸ் நகரில் முக்கிய கூட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கூட்டத்துக்கு முதலாவது தினமே சனல் 4 தொலைக்காட்சி இந்தப் போலியான முதலாவது வீடியோவை வெளியிட்டது.
அத்துடன், நான் பிரிட்டனுக்குச் சென்றிருந்த வேளை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்திக்க இருந்தேன். அந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சி இரண்டாவது வீடியோவை வெளியிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றார். அவர் உரையாற்றுவதற்கு முதல்நாளில் சனல் 4 தொலைக்காட்சி மூன்றாவது விடியோவை வெளியிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றார். அவர் உரையாற்றுவதற்கு முதல்நாளில் சனல் 4 தொலைக்காட்சி மூன்றாவது விடியோவை வெளியிட்டது.
போர்க்களத்தில் தோல்வியுற்றவர்கள் திரண்டு, சர்வதேச சக்திகளுடன் இணைந்து இலங்கைப் பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி முயற்சிகளைச் செய்து வருகிறார்கள். அதன் வெளிப்பாடுகளே இந்தப் போலி வீடியோக்களாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அளிக்காமலே போகும். ஜனாதிபதியை எவராலும் வீழ்த்த முடியாது. உலகின் எந்த இடத்துக்கும் அவர் செல்வார்.
ரஷ்யப் பயணம்
இதேவேளை, ஜனாதிபதியின் ரஷ்ய பயணம் தொடர்பாக அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் 2 லட்சத்து 97ஆயிரம் என்ற எண்ணிக்கையை 10 ஆயிரமாகக் குறைத்துள்ள சாதுரியத்தை ஸ்பெயின் பிரதமர் பாராட்டினார். அத்துடன் இலங்கையின் பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை குறித்து பெருமிதம் கொள்வதாக ஸ்பெயின் பிரதமர் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதியின் ரஷ்ய பயணம் தொடர்பாக அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் 2 லட்சத்து 97ஆயிரம் என்ற எண்ணிக்கையை 10 ஆயிரமாகக் குறைத்துள்ள சாதுரியத்தை ஸ்பெயின் பிரதமர் பாராட்டினார். அத்துடன் இலங்கையின் பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை குறித்து பெருமிதம் கொள்வதாக ஸ்பெயின் பிரதமர் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி திரிமித்தி மெத்வதேயையும் ஜனாதிபதி சந்தித்தார். பயங்கரவாதம் இலங்கையில் மட்டுமல்ல, ரஷ்யாவிலும் உள்ளதாக அவர் கூறினார். யுத்தம் இடம்பெறும் காலத்தைப் போன்றே எதிர்காலத்திலும் பொருளாதாரம் உட்பட உதவிகளை ரஷ்யா வழங்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி உறுதிமொழி வழங்கினார்.அதேபோன்றே சீன ஜனாதிபதி ஸ்ரீ ஜிந்தாவேயையும் ஜனாதிபதி சந்தித்தார்.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் மேற்குலக நாடுகளின் முயற்சிகளுக்கு சீனாவும், ரஷ்யாவும் தமது எதிர்ப்பை வெளியிட்டன. சர்வதேசத்துக்கு இலங்கை வழங்கும் மிகத் தெளிவான பதிலே இதுவாகும்.
இப்படி பீரிஸ் தெரிவித்தார்.
இப்படி பீரிஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment