
அமெரிக்கா ஆளில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய விமானங்களை தயாரித்துள்ளது. இவை முற்றிலும் கணணி மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆளில்லா விமானங்களை இயக்கும் கணணியில் வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கணணி மையம் அமெரிக்காவின் நிவேடாவில் உள்ள கிரீச் விமான படை தளத்தில் உள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலால் ஆளில்லா விமானங்கள் இயங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வைரஸ் கிருமிகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என தெரியவில்லை. அவை தற்செயலாக நடந்த நிகழ்வா? அல்லது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டதா? எனவும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


No comments:
Post a Comment