பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாரூக்கானை அடுத்து இயக்கப் போகிறார் தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குநரான ஏ ஆர் முருகதாஸ்.
கஜினி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இந்தியில் ஏ ஆர் முருகதாஸுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.
அவர் அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர் வடஇந்திய ரசிகர்கள்.
ஆனால் இப்போது ஏழாம் அறிவு பட வேலைகளில் தீவிரமாக இருக்கும் முருகதாஸ், அடுத்து விஜய்யை வைத்து தமிழில் புதுப் படத்தைத் தொடங்கிவிட்டார். இதன் பிறகுதான் இந்திப் படத்தை இயக்குகிறார்.
அவர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் ஷாரூக்கான் நாயகனாக நடிக்கிறார். இத்தகவலை ஷாரூக்கானே நேற்று தெரிவித்தார். அவரிடம் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மையா என்று கேட்டதற்கு, 'ஏ ஆர் முருகதாஸ் எனக்கு இரு கதைகள் சொல்லியுள்ளார். இரண்டிலுமே நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்த இரண்டில் எந்த ஸ்கிரிப்ட் முதலில் தயாராகிறதோ அதில் நடிப்பேன்,' என்றார்.
கஜினி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இந்தியில் ஏ ஆர் முருகதாஸுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.
அவர் அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கின்றனர் வடஇந்திய ரசிகர்கள்.
ஆனால் இப்போது ஏழாம் அறிவு பட வேலைகளில் தீவிரமாக இருக்கும் முருகதாஸ், அடுத்து விஜய்யை வைத்து தமிழில் புதுப் படத்தைத் தொடங்கிவிட்டார். இதன் பிறகுதான் இந்திப் படத்தை இயக்குகிறார்.
அவர் இயக்கும் புதிய இந்திப் படத்தில் ஷாரூக்கான் நாயகனாக நடிக்கிறார். இத்தகவலை ஷாரூக்கானே நேற்று தெரிவித்தார். அவரிடம் முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மையா என்று கேட்டதற்கு, 'ஏ ஆர் முருகதாஸ் எனக்கு இரு கதைகள் சொல்லியுள்ளார். இரண்டிலுமே நடிக்க ஆர்வமாக உள்ளேன். இந்த இரண்டில் எந்த ஸ்கிரிப்ட் முதலில் தயாராகிறதோ அதில் நடிப்பேன்,' என்றார்.
No comments:
Post a Comment