சென்னை: ஹம் படத்தின் ஷூட்டிங்கில் நான் பிரமித்துப் பார்த்த ரஜினி சாருடன் இணைந்து இன்று ரா ஒன் நடித்துவிட்டேன். இதை விடப் பெருமை எனக்கு வேறொன்றும் இல்லை, என்றார் இந்திப் படவுலகின் முன்னணி நாயகன் ஷாரூக்கான்.
சென்னையில் இன்று ஷாரூக்கானின் ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஷாரூக், தானே நிகழ்ச்சின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார்.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மணிரத்னம், சந்தோஷ் சிவன், அபிராமி ராமநாதன், செளந்தர்யா ரஜினிகாந்த், சுஹாசினி மணிரத்னம் என அனைவரையும் தானே மேடைக்கு அழைத்து கவுரவித்ததோடு, ஒவ்வொருவரிடமும் இந்தப் படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன, ட்ரெயிலர் எப்படி என்று கருத்துக்களைக் கேட்டார்.
பின்னர் தனது பேச்சின்போது, "சென்னையில் இருப்பதை மிக சந்தோஷமாக கருதுகிறேன். இந்தியாவில் தற்போது நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் இருந்து தான் வெளிவருகின்றன. இதை தான் நிறைய விழாக்களில் பேசி இருக்கிறேன்.
உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நமது அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முகுல் ஆனந்தின் ஹம் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று தூரத்திலிருந்து ஏங்கியவன் நான். அன்று அவரை பிரமித்துப் பார்த்தவன், இன்று அவரோடு ரா ஒன்னில் நடித்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.
ரஜினி மாதிரி சிறந்த பண்பாளரை பார்ப்பது அரிது. ரஜினி சார் ஒரு உண்மையான சாதனையாளர். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் அவரது படங்கள் அமையும். அது மிகவும் அபூர்வமானது. எனது பையன் கூட 'சிட்டி' 'சிட்டி' என்று கூறி கொண்டே இருப்பான்.
ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் மட்டுமல்ல, யாராலும் அது முடியாது. ரஜினி ரஜினிதான். அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. என்னைப் போன்ற நடிகர்கள் அவரைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, அவராகவே நடிக்க முயற்சிக்கக் கூடாது.
ரஜினி மகள் சவுந்தர்யா உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட பழகுவதற்கு எளிமையானவர். அவர் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.
எனது அடுத்த படமான டான் -2 -ஐயும் தமிழில் வெளியிட இருக்கிறோம். இந்தி சினிமாவில் தற்போது தமிழ் படங்கள் பல ரீமேக் செய்யப்படுகின்றன. எனக்கு ஏற்றவாறு கதைகள் இருந்தால் கண்டிப்பாக ரீமேக்கில் நடிப்பேன். ஆனால் ரஜினி படங்களின் ரீமேக்கில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் அவர் மட்டுமே நடிக்க முடியும்.
சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நான் 35 வயது வரை காதல் கதைகளில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்தேன். தற்போது வேறு கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அதே நேரம் 'ரா ஒன்' படத்திலும் காதல் இருக்கும்," என்றார்.
தீபாவளிக்கு உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் ரா ஒன் வெளியாவதாக ஷாரூக் கூறினார்.
சென்னையில் இன்று ஷாரூக்கானின் ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஷாரூக், தானே நிகழ்ச்சின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார்.
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மணிரத்னம், சந்தோஷ் சிவன், அபிராமி ராமநாதன், செளந்தர்யா ரஜினிகாந்த், சுஹாசினி மணிரத்னம் என அனைவரையும் தானே மேடைக்கு அழைத்து கவுரவித்ததோடு, ஒவ்வொருவரிடமும் இந்தப் படத்தின் பாடல்கள் எப்படி இருந்தன, ட்ரெயிலர் எப்படி என்று கருத்துக்களைக் கேட்டார்.
பின்னர் தனது பேச்சின்போது, "சென்னையில் இருப்பதை மிக சந்தோஷமாக கருதுகிறேன். இந்தியாவில் தற்போது நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் இருந்து தான் வெளிவருகின்றன. இதை தான் நிறைய விழாக்களில் பேசி இருக்கிறேன்.
உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நமது அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முகுல் ஆனந்தின் ஹம் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று தூரத்திலிருந்து ஏங்கியவன் நான். அன்று அவரை பிரமித்துப் பார்த்தவன், இன்று அவரோடு ரா ஒன்னில் நடித்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.
ரஜினி மாதிரி சிறந்த பண்பாளரை பார்ப்பது அரிது. ரஜினி சார் ஒரு உண்மையான சாதனையாளர். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் அவரது படங்கள் அமையும். அது மிகவும் அபூர்வமானது. எனது பையன் கூட 'சிட்டி' 'சிட்டி' என்று கூறி கொண்டே இருப்பான்.
ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் மட்டுமல்ல, யாராலும் அது முடியாது. ரஜினி ரஜினிதான். அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. என்னைப் போன்ற நடிகர்கள் அவரைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, அவராகவே நடிக்க முயற்சிக்கக் கூடாது.
ரஜினி மகள் சவுந்தர்யா உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட பழகுவதற்கு எளிமையானவர். அவர் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.
எனது அடுத்த படமான டான் -2 -ஐயும் தமிழில் வெளியிட இருக்கிறோம். இந்தி சினிமாவில் தற்போது தமிழ் படங்கள் பல ரீமேக் செய்யப்படுகின்றன. எனக்கு ஏற்றவாறு கதைகள் இருந்தால் கண்டிப்பாக ரீமேக்கில் நடிப்பேன். ஆனால் ரஜினி படங்களின் ரீமேக்கில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் அவர் மட்டுமே நடிக்க முடியும்.
சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நான் 35 வயது வரை காதல் கதைகளில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்தேன். தற்போது வேறு கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். அதே நேரம் 'ரா ஒன்' படத்திலும் காதல் இருக்கும்," என்றார்.
தீபாவளிக்கு உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் ரா ஒன் வெளியாவதாக ஷாரூக் கூறினார்.
No comments:
Post a Comment