பாடிகார்ட் இந்திப் படத்தின் வசூல் எக்கச்சக்கம் என செய்தி வெளியாகியுள்ளதால் தினமும் நன்கொடை கேட்டு நச்சரிக்கிறார்களாம் அந்தப் படத்தின் இயக்குநர் சித்திக்கை.
கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் விஜய் நடித்த பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில் விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது.
இதனால் மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம் மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனது தெரிந்து, தன்னை தினமும் பல சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு நச்சரிப்பதாகவும், இதனால் தனக்கு தூக்கமே போய்விட்டதாகவும் சித்திக் புலம்ப ஆரம்பித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "படத்தை இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்துக்குதான் சேரும். இது புரியாமல் பலரும் என்னை தேடி வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான சம்பளம் கிடைத்துள்ளது.
மலையாள படங்களை மாற்று மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை. விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன்," என்றார்.
கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் விஜய் நடித்த பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில் விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது.
இதனால் மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம் மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனது தெரிந்து, தன்னை தினமும் பல சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு நச்சரிப்பதாகவும், இதனால் தனக்கு தூக்கமே போய்விட்டதாகவும் சித்திக் புலம்ப ஆரம்பித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "படத்தை இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்துக்குதான் சேரும். இது புரியாமல் பலரும் என்னை தேடி வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான சம்பளம் கிடைத்துள்ளது.
மலையாள படங்களை மாற்று மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை. விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன்," என்றார்.
No comments:
Post a Comment