தனது இரண்டாவது கணவர் ராஜனிடமிருந்து விவாகரத்து கோரி நடிகை வனிதா விஜயகுமார் நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடன் ராஜனும் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புதல் தெரிவித்து மனுதாக்கல் செய்தார்.
நடிகை வனிதா, சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
ஆகாஷூடன் வசிக்கும் மகன் ஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஹரி தாயுடன் செல்ல மறுத்து விட்டான். எனவே மகனுக்காக தனது இரண்டாவது கணவரைப் பிரிவது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். மகனுக்காக மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் வனிதா பேட்டி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் வனிதாவும், 2-வது கணவர் ராஜன்ஆனந்தும் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு வந்தனர். இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
2007ல் திருமணம் நடந்து. கடந்த ஆகஸ்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். பரஸ்பர முறையில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்திருப்பதால் எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
நடிகை வனிதா, சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
ஆகாஷூடன் வசிக்கும் மகன் ஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஹரி தாயுடன் செல்ல மறுத்து விட்டான். எனவே மகனுக்காக தனது இரண்டாவது கணவரைப் பிரிவது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார். மகனுக்காக மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் வனிதா பேட்டி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் வனிதாவும், 2-வது கணவர் ராஜன்ஆனந்தும் நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு வந்தனர். இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
2007ல் திருமணம் நடந்து. கடந்த ஆகஸ்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். பரஸ்பர முறையில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்திருப்பதால் எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
No comments:
Post a Comment