இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய மற்றும் காத்திரமான தகவல் இது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த அதி முக்கிய நபர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே சனல் 4 இத் தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசின் மிக நெருங்கிய நண்பரான லியாம் பொஃக்ஸ் அவர்கள் தன்னுடன் தனது நண்பரையும் எப்போதும் அழைத்துச் செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு அவர் நணபர் பல தடவை பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலகத்துக்கு வியஜம் செய்வது, அந் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்தாக உள்ளதாக பிரித்தானியப் பத்திரிகைகள் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அவர்கள் லியாம் பொஃக்ஸை அழைத்து பேசியுள்ளார். இருப்பினும் டேவிட் கமரூன் அவர்கள் தனது அமைச்சரவையில் உள்ள லியாம் பொஃக்ஸ்சுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
ஆனால் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகப் பாரதூரமானவையாக உள்ளது. லியாம் பொஃக்ஸின் நண்பர் அடாம் ரிட்டி அவர்கள் இலங்கையில் தங்கிருந்த கால கட்டத்தில் அவர் செலவுகளை இலங்கை அரசே பொறுப்பேற்றதாக சனல் 4 தொலைக்காட்சி தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
அரச முறைச் சுற்றுப் பயணத்தில் லியாம் பொஃக்ஸ் செல்லும் போது அவர் நண்பரான அடாம் ரிட்டியை இவர் அழைத்துச் சென்றது தவறு என்ற கருத்துக்களும் ஏற்கனவே முன்வைக்கப்படமை குறிப்பிடத்தக்க விடையமாகும். எது எவ்வாறு இருப்பினும் தற்போது லியாம் பொஃக்ஸுக்கும் மேல் பிரயோகிக்கப்படும் ஊடக அழுத்தம் நீடித்தால் அவர் நிச்சயம் பதவி விலக நேரிடும் என நம்பப்படுகிறது. அது நடந்தால் தமிழர்களுக்கு மேலும் பலம் ஓங்கும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment