பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்ததாக கூறி மாயவரம் என்ற படத்தின் தயாரிப்பு மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாயவரம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜேந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நேற்று இரவு நடந்தது. ஆனால் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்ததால் போலீஸார் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து படப்பிடிப்பு நடத்த போலீஸார் லஞ்சம் கேட்பதாக படத் தயாரிப்பாளர் பரபரபப்பு புகார் கூறினார்.
இந்த நிலையில், இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் தயாரிப்பு மேலாளர் மீது நந்தம்பாக்கம் போலீஸார் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பால் தங்களது அமைதியும், நிம்மதியும் பாதிக்கப்பட்டதாக கூறி சுப்புலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் படக்குழுவினர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயவரம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜேந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நேற்று இரவு நடந்தது. ஆனால் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்ததால் போலீஸார் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து படப்பிடிப்பு நடத்த போலீஸார் லஞ்சம் கேட்பதாக படத் தயாரிப்பாளர் பரபரபப்பு புகார் கூறினார்.
இந்த நிலையில், இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் தயாரிப்பு மேலாளர் மீது நந்தம்பாக்கம் போலீஸார் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பால் தங்களது அமைதியும், நிம்மதியும் பாதிக்கப்பட்டதாக கூறி சுப்புலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் படக்குழுவினர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment