சென்னை; ரா ஒன் விழாவில் பேசிய ஷாரூக்கான் deaf and dump என்ற வார்த்தையைப் பிரயோகித்ததற்கு விழாவுக்கு வந்த ரசிகை ஒருவர் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தன் தவறைத் திருத்திக் கொள்வதாகக் கூறினார் ஷாரூக்.
ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படம் ரா-1. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருவதால், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அஜீத்துடன் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். அந்தப் படமும் தமிழில் வந்தது. இந்த வரிசையில் ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஷாருக்கான், "தமிழில் நேரடியான படங்கள் நடிக்க ஆசை தான். ஆனால், என்னால் தமிழ் பேசி நடிக்க முடியாது. அப்படி நடித்தால், காது கேளாத வாய் பேச முடியாதவனாகத்தான் நடிக்க முடியும்'' என்றார். (இதைச் சொல்லும் போது, ஆங்கிலத்தில் deaf and dumb என்ற வார்த்தைகளை பிரயோகித்தார்).
அப்போது விழாவுக்கு வந்த பெண்மணி ஒருவர் எழுந்து, ஷாருக்கானை பார்த்து, ''இந்தியாவின் மிகப்பெரிய நடிகர். நீங்களே இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது, எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று தொடர்ந்து பேசினார்.
அவரது பேச்சில் குறுக்கிட்ட ஷாருக்கான், ''நான் வேண்டுமென்று அப்படி பேசவில்லை. இதற்கு வேறு என்ன வார்த்தையைப் பயன்படுத்துவது... நீங்கள் சொன்னால், அதை நான் திருத்திக்கொள்கிறேன்,'' என்றார்.
அதற்கு அந்த பெண், 'Mute' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமே என்றார். அதனை ஷாருக்கான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிய ஷாரூக்கானிடம், ரஜினியை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "சென்னை வந்து இன்னும் ரஜினி சாரை சந்திக்கவில்லை. இப்போதுதான் சந்திக்கப் போகிறேன்," என்றார்.
விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மேடையில் ரா-1 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான் நடனம் ஆடி, வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
ஷாருக்கான் நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தி படம் ரா-1. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருவதால், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
ஷாருக்கான் இந்த விழாவில் கலந்து கொண்டு, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய தில்சே இந்தி படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹேராம் படத்திலும் அவர் நடித்திருந்தார். அஜீத்துடன் அசோகா என்ற படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். அந்தப் படமும் தமிழில் வந்தது. இந்த வரிசையில் ரா-1 படம் தீபாவளி அன்று வெளியாகிறது.
இந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகை சுகாசினி, ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஷாருக்கான், "தமிழில் நேரடியான படங்கள் நடிக்க ஆசை தான். ஆனால், என்னால் தமிழ் பேசி நடிக்க முடியாது. அப்படி நடித்தால், காது கேளாத வாய் பேச முடியாதவனாகத்தான் நடிக்க முடியும்'' என்றார். (இதைச் சொல்லும் போது, ஆங்கிலத்தில் deaf and dumb என்ற வார்த்தைகளை பிரயோகித்தார்).
அப்போது விழாவுக்கு வந்த பெண்மணி ஒருவர் எழுந்து, ஷாருக்கானை பார்த்து, ''இந்தியாவின் மிகப்பெரிய நடிகர். நீங்களே இந்த மாதிரியான வார்த்தைகளை உபயோகிப்பது, எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. நீங்கள் அந்த வார்த்தைகளை திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று தொடர்ந்து பேசினார்.
அவரது பேச்சில் குறுக்கிட்ட ஷாருக்கான், ''நான் வேண்டுமென்று அப்படி பேசவில்லை. இதற்கு வேறு என்ன வார்த்தையைப் பயன்படுத்துவது... நீங்கள் சொன்னால், அதை நான் திருத்திக்கொள்கிறேன்,'' என்றார்.
அதற்கு அந்த பெண், 'Mute' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமே என்றார். அதனை ஷாருக்கான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிய ஷாரூக்கானிடம், ரஜினியை சந்தித்தீர்களா? என்ன பேசினீர்கள்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "சென்னை வந்து இன்னும் ரஜினி சாரை சந்திக்கவில்லை. இப்போதுதான் சந்திக்கப் போகிறேன்," என்றார்.
விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மேடையில் ரா-1 படத்தில் வரும் ஒரு பாடலுக்கு ஷாருக்கான் நடனம் ஆடி, வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
No comments:
Post a Comment