டெல்லி: டெல்லியில் இன்று காலை அன்னா ஹஸாரேவை நடிகர் விஜய் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார். பின்னர் மாலை வரை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்.
சமீபத்தில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வழக்கம் போல சினிமாக்காரர்களின் பாலிட்டிக்ஸ் இதில் குறுக்கிட்டது. நான் வர மாட்டேன், நீ வர மாட்டேன் என்று கூறி பலரும் ஆப்சென்ட் ஆனார்கள். நடிகர்கள் தரப்பில் சூர்யா மட்டுமே ஆஜராகியிருந்தார்.
இந்த உண்ணாவிரதம் சரியாக திட்டமிடப்படவில்லை, யாரிடமும் ஆலோசனை கேட்கப்படவில்லை, எனவே இதில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கூறி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று டெல்லி போய் அங்கு அன்னாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக விஜய் கூறியுள்ளார். மேலும், அங்கேயே இன்று மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வழக்கம் போல சினிமாக்காரர்களின் பாலிட்டிக்ஸ் இதில் குறுக்கிட்டது. நான் வர மாட்டேன், நீ வர மாட்டேன் என்று கூறி பலரும் ஆப்சென்ட் ஆனார்கள். நடிகர்கள் தரப்பில் சூர்யா மட்டுமே ஆஜராகியிருந்தார்.
இந்த உண்ணாவிரதம் சரியாக திட்டமிடப்படவில்லை, யாரிடமும் ஆலோசனை கேட்கப்படவில்லை, எனவே இதில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கூறி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று டெல்லி போய் அங்கு அன்னாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக விஜய் கூறியுள்ளார். மேலும், அங்கேயே இன்று மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment