8/25/2011 3:50:07 PM
ரொம்ப யோசித்துதான் புதியவர்களின் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதிலும் சமீபகால தோல்விகள் அவரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளன. இருந்தும் அறிமுக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், கதைதான் காரணம். சுசீந்திரன் இயக்கத்தில் ராஜபாட்டை படத்தில் நடித்து வரும் விக்ரம், கண்ணன் இயக்கத்தில் கரிகாலன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட் படம். கிளாடியேட்டர் மாதிரியான சரித்திரப் படம். இதில் சோழர்கால கதையை சொல்லவிருக்கிறாராம் இயக்குனர் கண்ணன். நேற்று படத்தின் விளம்பரத்தை வெளியிட்டாலும் பட வேலைகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. ம்… ஒரே நேரத்தில் விக்ரம் இரண்டு படங்களில் நடித்து எவ்வளவு நாளாகிறது.
No comments:
Post a Comment