கொலை செய்யப்பட்ட போராளிகளையும், பொது மக்களையும் நிர்வாணப்படுத்தி வேடிக்கையாக கேலி செய்கிறார்கள். மனித இனம் என்று சொல்வதற்கே வெட்கமான செயலை சிறீலங்கா இராணுவத்தினர் இறந்த உடலங்களின் மீது செய்வதை தெளிவாகக் காண முடிகிறது.
இவ்வளவு இரத்தக் காட்டுக்குள் சிங்கள இராணுவ கொலைஞன் ஒருவன் முகத்தைக் காட்டி பேய் போல சிரிக்கிறான்.. கைகளை கட்டி, கண்களையும் கட்டிவிட்டு துப்பாக்கியால் மிக அருகில் சுடுகிறார்கள். இந்தச் செயலை பொது மக்கள் எவரையும் கொல்லாத போர் என்று சிங்கள ஆட்சியாளர் கூறுவதாக சனல் 4 தெரிவித்தது.
கடுகளவும் மனித மரியாதையற்ற இந்த மிருகங்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியதில் தவறென்ன உண்டு என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த நிகழ்வு. நரபலி எடுக்கும் பேய்களின் கூட்டமாக இது தெரிகிறது.


No comments:
Post a Comment