ராணா படப்பூஜையின் போதே ரஜனி நோய்வாய்ப்பட்டதுடன் அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இதன் பின்னர் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்று சில மாதங்களின் பின்னர் இந்தியாவிற்கு திரும்பினார்.
அவரது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் இப்படம் கைவிடப்படுமென ஆரம்பம் முதலே செய்திகள் வெளியாகியிருந்தன.
இத்தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது ரஜனி கே.எஸ். ரவிக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இதன் போது இப்படம் நிறைவடைய 1 1/2 வருடங்கள் வரை தேவையென்பதனால் தற்போதைக்கு ரஜனியால் அது சாத்தியமில்லையென்பதனால் இப்படத்தினைக் கைவிடும் நிலைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது,
எனினும் ரஜனி கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து வேறு படமொன்றில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு சிலதினங்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment