நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கும் ஆற்றல் ஜனாதிபதியிடம் இல்லையென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை மஹிந்த பெற்றுக் கொடுக்காததன் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
அதனை மறைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினர் மீது ஆளுங்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இலங்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் இன்னும் உரிய வகையிலான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க மஹிந்த அரசினால் முடிவில்லை என்றார் ரணில்.
No comments:
Post a Comment