9/27/2011 2:30:15 PM
ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமி 'எங்கேயும் எப்போதும்' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் தன்னுடைய தயாரிப்பில், ஒரு படம் செய்து தருமாறு சரவணிடம் லிங்குசாமி கேட்டதாக தெரிகிறது. தற்போது லிங்குசாமி ஆர்யா மற்றும் மாதவன் நடிக்கும் 'வேட்டை' படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சரவணன் ஆர்யாவிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆர்யாவுக்கும் கதை பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். அதே சமயம் வேட்டை முடிந்த பிறகு வசந்த பாலன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறாராம். ஆனால் வசந்த பாலனின் அரவான் படம் ஷூட்டிங் இன்னும் முடியாததால், சரவணன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க கூடும் என தெரிகிறது.
No comments:
Post a Comment