மும்பை: நடிகை பாரிஸ் ஹில்டனுக்காக மும்பை நிருபர்கள் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து கடுப்பானார்கள். கடைசி நேரத்தில் அவர் வேறு உடை மாற்ற விரும்பியதே இந்த தாமதத்துக்குக் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.
பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். ஆடம்பர கைப்பைகள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனங்களை பிரபலப்படுத்துவதற்காக அவர் வந்திருந்தார்.
இதனையொட்டி, மும்பை ஜேடபிள்யூ மாரியட் ஹோட்டல் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலை 3 மணிக்கு பிரஸ் மீட் என்று அறிவித்திருந்ததால் முன்கூட்டியே ஏராளமான நிருபர்கள் குவிந்துவிட்டனர்.
ஆனால் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகத்தான் வந்தார் பாரிஸ் ஹில்டன். பொறுமையிழந்த நிருபர்கள் சத்தம் போட ஆரம்பிக்க, அவர்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் ஏற்பாட்டாளர்கள்.
ஒருவழியாக மாலை 5 மணி்க்கு மேல் வந்தார் ஹில்டன். பிரஸ்மீட்டுக்கு முதலில் ஒரு உடையமணிந்து கிளம்பிய ஹில்டன், பாதி வழியில் வந்ததும், அதைவிட சிறப்பாக வேறொரு உடையை அணிய விரும்பினாராம்.
எனவே மீண்டும் தனக்குப் பிடித்த வெகு கவர்ச்சியான உடையை அணிந்து வந்தார். தாமதத்துக்கு ஒரு சாரி சொன்ன பாரிஸ் ஹில்டன், எடுத்த எடுப்பில் இந்தியா மற்றும் இந்தியப் பெண்களின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்டு, கேள்விக் கணைகளோடு காத்திருந்த நிருபர்களை கூல் பண்ணிவிட்டார்!
அதென்ன பாரிஸ் ஹில்டன்... நீங்கள் பிரெஞ்சுக்காரரா என்று ஒரு நிருபர் அதிமுக்கிய கேள்வி ஒன்றை கேட்க, ஹில்டன் சிரித்தபடி, "பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை.
எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.
இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா," என்றார்.
இந்தியர்களின் கோபத்தைச் சமாளிக்கும் கலை பாரிஸ் ஹில்டன் போன்றவர்களுக்கு நன்றாகவே கைவருகிறது!
பிரபல ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். ஆடம்பர கைப்பைகள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனங்களை பிரபலப்படுத்துவதற்காக அவர் வந்திருந்தார்.
இதனையொட்டி, மும்பை ஜேடபிள்யூ மாரியட் ஹோட்டல் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலை 3 மணிக்கு பிரஸ் மீட் என்று அறிவித்திருந்ததால் முன்கூட்டியே ஏராளமான நிருபர்கள் குவிந்துவிட்டனர்.
ஆனால் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகத்தான் வந்தார் பாரிஸ் ஹில்டன். பொறுமையிழந்த நிருபர்கள் சத்தம் போட ஆரம்பிக்க, அவர்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர் ஏற்பாட்டாளர்கள்.
ஒருவழியாக மாலை 5 மணி்க்கு மேல் வந்தார் ஹில்டன். பிரஸ்மீட்டுக்கு முதலில் ஒரு உடையமணிந்து கிளம்பிய ஹில்டன், பாதி வழியில் வந்ததும், அதைவிட சிறப்பாக வேறொரு உடையை அணிய விரும்பினாராம்.
எனவே மீண்டும் தனக்குப் பிடித்த வெகு கவர்ச்சியான உடையை அணிந்து வந்தார். தாமதத்துக்கு ஒரு சாரி சொன்ன பாரிஸ் ஹில்டன், எடுத்த எடுப்பில் இந்தியா மற்றும் இந்தியப் பெண்களின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்டு, கேள்விக் கணைகளோடு காத்திருந்த நிருபர்களை கூல் பண்ணிவிட்டார்!
அதென்ன பாரிஸ் ஹில்டன்... நீங்கள் பிரெஞ்சுக்காரரா என்று ஒரு நிருபர் அதிமுக்கிய கேள்வி ஒன்றை கேட்க, ஹில்டன் சிரித்தபடி, "பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை.
எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.
இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா," என்றார்.
இந்தியர்களின் கோபத்தைச் சமாளிக்கும் கலை பாரிஸ் ஹில்டன் போன்றவர்களுக்கு நன்றாகவே கைவருகிறது!
No comments:
Post a Comment