இந்த நிலையில் மரிய தீபக் தனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ’’நான் லயோலா கல்லூரியில் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது.
நாங்கள் இருவரும் 2 1/2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம்.
கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார்.
அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.
எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன், ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் வித்யாவை அழைத்து, நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு வித்யா கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த வித்யாவை தீபக் மகிழ்ச்சியுடன் வரவேற்று தன்னுடன் அழைத்துச் சென்றார்.
No comments:
Post a Comment