மழை காரணமாக, சென்னையில் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை ஒத்திப் போட்டார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் தலைப்பில் சென்னை மற்றும் கோவையில் இசைக் கச்சேரி நடத்தப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார். சர்வதேச தரத்தில், நல்ல ஒலியமைப்பில் உள்ளூர் ரசிகர்களுக்கு தான் அளிக்கும் திரைவிருந்து என அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
டிக்கெட்டுகள் மளமளவென விற்பனையாகிவந்த நிலையில், சென்னையில் திடீர் திடீரென பெரும் மழை வெளுத்துக்கட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மாலை வேளைகளில் கச்சேரி நடத்துவது சென்னையில் சாத்தியமில்லாததாகிவிட்டது.
எனவே சென்னையில் வரும் அக்டோபர் 8-ம் தேதியும், கோவையில் ஏற்கெனவே அறிவித்தது போல அக்டோபர் 16-ம் தேதியும் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் என தனது பிஆர்ஓ நிகில் மூலம் அறிவித்துள்ளார் ஹாரிஸ்.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இந்த இசை நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் தலைப்பில் சென்னை மற்றும் கோவையில் இசைக் கச்சேரி நடத்தப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார். சர்வதேச தரத்தில், நல்ல ஒலியமைப்பில் உள்ளூர் ரசிகர்களுக்கு தான் அளிக்கும் திரைவிருந்து என அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
டிக்கெட்டுகள் மளமளவென விற்பனையாகிவந்த நிலையில், சென்னையில் திடீர் திடீரென பெரும் மழை வெளுத்துக்கட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மாலை வேளைகளில் கச்சேரி நடத்துவது சென்னையில் சாத்தியமில்லாததாகிவிட்டது.
எனவே சென்னையில் வரும் அக்டோபர் 8-ம் தேதியும், கோவையில் ஏற்கெனவே அறிவித்தது போல அக்டோபர் 16-ம் தேதியும் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் என தனது பிஆர்ஓ நிகில் மூலம் அறிவித்துள்ளார் ஹாரிஸ்.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இந்த இசை நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment