9/27/2011 10:49:07 AM
பொதுவாக தன்னுடைய படங்களுக்கு கவிதை நடையில் தலைப்பு வைக்கும் கௌதம், இந்தியில் தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பெயரை மாற்றியுள்ளார். முதலில் ப்ரேம் கதா என்று பெயர் வைத்திருந்த கௌதம் அது கவிதை நடையில் இல்லை என்று கூறி படத்தின் பெயரை ‘ஏக் தீவானா தா’ என்று மாற்றியுள்ளார். இது ரிஷி கபூரின் பழைய படமொன்றின் பாப்புலர் பாடலின் வரி. கௌதம் இப்போ ஹேப்பி. முன்னதாக தன்னுடைய தமிழ் படங்களுக்கும் தமிழ் பாடல் வரிகளே பெயர்களாக வைத்து வருகிறார். உதாரணமாக விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம்… எல்லாமே பாடல்களின் முதல் வரி. ஆனால் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு மட்டும் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என பெயர் வைத்துள்ளார்.
No comments:
Post a Comment