
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து சிறிலங்கா அதிபர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், தமிழீழம் அமைக்கும் திட்டத்தை கொண்டிருப்போரும் நம்பியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எனினும் சிறிலங்கா அதிபர் தனது அமெரிக்க நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்காமல், அங்கேயே தங்கியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு ஓடிவிட போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment