இப்பொழுதெல்லாம், ஒரு படத்தின் ஒற்றைப் பாடலை வெளியிடுவது புதிய வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில், விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ஒற்றைப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
அமலா பால், அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடலை ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்குமார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.
அந்த அனுபவம் பற்றிப் பேசிய தாமரை, "பொதுவாக என்னை காதல் பாடல்கள் எழுதுபவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள். எனக்கும் தத்துவ, சோக, புரட்சி, தாலாட்டுப் பாடல்கள் எழுதணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.
இப்போது வெளியாகியுள்ள பாடல் வித்தியாசமானது. காதலிக்கு காதலன் தர நினைக்கிற பரிசைப் பற்றிய பாடல். நானும் என் காலத்தை மனதில் கொண்டு சில வரிகளை எழுத, இல்ல, இந்தக் காலத்துக்கேத்த பரிசுகளை வரிசைப் படுத்துங்க என்றார்கள். அப்படி என்னதான் இந்தக் காலத்தில் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, சிட்டி சென்டர், எஸ்கேப், ஸ்கை வாக் என்று நவீன ஷாப்பிங் மால்களுக்கு என்னை கூட்டிப் போனார்கள். அங்கே பார்த்த பிறகுதான் இன்றைய வழக்கங்களே வேறாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறேன்," என்றார்.
இசைத்தட்டை வெளியிட்ட ஜீவா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இயக்குநர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் பேசினர்.
மிக சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு!
அந்த வகையில், விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ஒற்றைப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
அமலா பால், அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடலை ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்குமார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.
அந்த அனுபவம் பற்றிப் பேசிய தாமரை, "பொதுவாக என்னை காதல் பாடல்கள் எழுதுபவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள். எனக்கும் தத்துவ, சோக, புரட்சி, தாலாட்டுப் பாடல்கள் எழுதணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.
இப்போது வெளியாகியுள்ள பாடல் வித்தியாசமானது. காதலிக்கு காதலன் தர நினைக்கிற பரிசைப் பற்றிய பாடல். நானும் என் காலத்தை மனதில் கொண்டு சில வரிகளை எழுத, இல்ல, இந்தக் காலத்துக்கேத்த பரிசுகளை வரிசைப் படுத்துங்க என்றார்கள். அப்படி என்னதான் இந்தக் காலத்தில் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, சிட்டி சென்டர், எஸ்கேப், ஸ்கை வாக் என்று நவீன ஷாப்பிங் மால்களுக்கு என்னை கூட்டிப் போனார்கள். அங்கே பார்த்த பிறகுதான் இன்றைய வழக்கங்களே வேறாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறேன்," என்றார்.
இசைத்தட்டை வெளியிட்ட ஜீவா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இயக்குநர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் பேசினர்.
மிக சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு!
No comments:
Post a Comment