ஒரு நடிகராகும் முனைப்பில் திரையுலகில் நுழைந்தவரல்ல விஷால். இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகரும் இயக்குநருமான அர்ஜுன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகத்தான் அவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது.
சட்டென்று 'செல்லமே'யில் நடிகராகி, மளமளவென முன்னேறி இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக நிற்கிறார்.
பிரபு தேவா இயக்கத்தில் இவரும் சமீராவும் ஜோடி சேர்ந்திருக்கும் 'வெடி' வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
வெடியின் ஸ்பெஷல் என்ன?
"இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற சவுரியம் படத்தின் ரீமேக். ஆனால் அதை விட மிக அழகாக படத்தை மெருகேற்றியுள்ளார் பிரபு தேவா மாஸ்டர்.
பொதுவா தெலுங்கில் எந்தப் படம் ஜெயித்தாலும் உடனே அதை தமிழில் நாம பண்ணனும் என்பதுதான் என் ஆசை. ஆனா எல்லா படத்தையும் பண்ண முடியாது. என்னைத் தவிர யார் பண்ணாலும் அதை தாங்கவும் முடியாது. அப்படி நான் மிஸ் பண்ண படம் சந்தோஷ் சுப்ரமணியம்.
தெலுங்கில் சவுரியம் ரிலீஸ் ஆனதும் நாங்க அதன் ரீமேக் ரைட்ஸை வாங்கிட்டோம். அப்போதே தீர்மானிச்ச ஒரு விஷயம், படத்தின் இயக்குநர் பிரபுதேவா மாஸ்டர்தான் என்பது.
இந்தப் படத்துக்கே புதிய கலர், ஃபீலைக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. அவன் இவன் படத்தில் என் நடிப்பை எல்லோரும் புகழ்ந்தார்கள். இந்தப் படத்தில் அந்தப் பெயரை காப்பாத்திக்குவேன்னு நினைக்கிறேன்," என்றார்.
தீபாவளிக்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் படத்தை வெளியிடுகிறார்கள். காரணம் கேட்டால், "இப்போல்லாம் எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள்தான் கலெக்ஷன். தசரா, காலாண்டு லீவ் என நல்ல டைம் இது. அதனால்தான் தீபாவளிக்கு வெளியிடாமல் இப்போதே ரிலாஸ் செய்கிறோம்," என பக்காவாக பிஸினஸ் பேசினார் விஷால்.
அடுத்தடுத்து பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்களின் படங்கள் என விஷால் பிஸியாக இருந்தாலும், உள்ளுக்குள் அந்த இயக்குநர் ஆசை அப்படியே இருக்கிறதாம்.
எப்போது இயக்குநராகும் ஐடியா?
"விஜய்க்காக ஒரு கதை வச்சுருக்கேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். ரொம்ப நாளா அவருக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதை அது. அவர் சம்மதிச்சா இயக்க நான் இப்போதே ரெடி" என்றார் விஷால்.
விஜய் ரெடியா?
சட்டென்று 'செல்லமே'யில் நடிகராகி, மளமளவென முன்னேறி இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக நிற்கிறார்.
பிரபு தேவா இயக்கத்தில் இவரும் சமீராவும் ஜோடி சேர்ந்திருக்கும் 'வெடி' வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
வெடியின் ஸ்பெஷல் என்ன?
"இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற சவுரியம் படத்தின் ரீமேக். ஆனால் அதை விட மிக அழகாக படத்தை மெருகேற்றியுள்ளார் பிரபு தேவா மாஸ்டர்.
பொதுவா தெலுங்கில் எந்தப் படம் ஜெயித்தாலும் உடனே அதை தமிழில் நாம பண்ணனும் என்பதுதான் என் ஆசை. ஆனா எல்லா படத்தையும் பண்ண முடியாது. என்னைத் தவிர யார் பண்ணாலும் அதை தாங்கவும் முடியாது. அப்படி நான் மிஸ் பண்ண படம் சந்தோஷ் சுப்ரமணியம்.
தெலுங்கில் சவுரியம் ரிலீஸ் ஆனதும் நாங்க அதன் ரீமேக் ரைட்ஸை வாங்கிட்டோம். அப்போதே தீர்மானிச்ச ஒரு விஷயம், படத்தின் இயக்குநர் பிரபுதேவா மாஸ்டர்தான் என்பது.
இந்தப் படத்துக்கே புதிய கலர், ஃபீலைக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. அவன் இவன் படத்தில் என் நடிப்பை எல்லோரும் புகழ்ந்தார்கள். இந்தப் படத்தில் அந்தப் பெயரை காப்பாத்திக்குவேன்னு நினைக்கிறேன்," என்றார்.
தீபாவளிக்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் படத்தை வெளியிடுகிறார்கள். காரணம் கேட்டால், "இப்போல்லாம் எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள்தான் கலெக்ஷன். தசரா, காலாண்டு லீவ் என நல்ல டைம் இது. அதனால்தான் தீபாவளிக்கு வெளியிடாமல் இப்போதே ரிலாஸ் செய்கிறோம்," என பக்காவாக பிஸினஸ் பேசினார் விஷால்.
அடுத்தடுத்து பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்களின் படங்கள் என விஷால் பிஸியாக இருந்தாலும், உள்ளுக்குள் அந்த இயக்குநர் ஆசை அப்படியே இருக்கிறதாம்.
எப்போது இயக்குநராகும் ஐடியா?
"விஜய்க்காக ஒரு கதை வச்சுருக்கேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். ரொம்ப நாளா அவருக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதை அது. அவர் சம்மதிச்சா இயக்க நான் இப்போதே ரெடி" என்றார் விஷால்.
விஜய் ரெடியா?
No comments:
Post a Comment