வவுனியா ஆசிக்குளம், தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த தாயும், மகளும் பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிகுளம் தரணிகுளம் பகுதியில் உள்ள சசிகரன் தவமலர் (வயது 42) என்பரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணையும், அவரது 16 வயது மகளான யதுர்ஷினியையும் கைது செய்துள்ளனர்.
கணவன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வரும் நிலையிலேயே, தவமலரும், அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யதுர்ஷினி இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட தாயும், மகளும் விசாரணைக்காக பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆசிகுளம் தரணிகுளம் பகுதியில் உள்ள சசிகரன் தவமலர் (வயது 42) என்பரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணையும், அவரது 16 வயது மகளான யதுர்ஷினியையும் கைது செய்துள்ளனர்.
கணவன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வரும் நிலையிலேயே, தவமலரும், அவரது மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யதுர்ஷினி இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட தாயும், மகளும் விசாரணைக்காக பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment