இலங்கை அரசு அண்மையில் புலம்பெயர் தமிழரைக் குறி வைத்து செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பது தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை தனது கவலையையும் விசனத்தையும் தெரிவித்துள்ளதுடன் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த மாதம் ஐ.நாவின் மனிதவுரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகக் கனடியத் தமிழர் பேரவையும் மற்றும் பல அமைப்புகளும் மும்முரமாகச் செயற்பட்டன.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாகப் புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டுச் சட்டங்களுக்கு அமையச் செயற்படும் தமிழர் அமைப்புகளையும், தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.
இலங்கை அரசின் இத் தன்னிச்சையான முடிவு மற்றும் அதன் ஜனநாயக விரோதப் போக்குத் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் தமிழரின் குரலை ஒடுக்கு முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுப் பன்னாட்டு விசாரணைக்குத் தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் பல சந்திப்புகளை நேற்று ஒட்டாவாவில் கனடாவின் முக்கிய கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டது.
ஒட்டாவாவில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகியவற்றுடன் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இராஜ் தவரட்ணசிங்கம், செயலாளர் செல்வி வாணி செல்வராசா, நிறைவேற்று இயக்குனர் திரு டன்ரன் துரைராசா மற்றும் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் இச் சந்திப்புகளிற் பங்கேற்றனர்.
இச் சந்திப்பின்போது, கனடாவில் ஜனநாயக ரீதியாகச் செயற்படும் பொது அமைப்புகளையும் தனிப்பட்டோரையும் இலங்கை தடை செய்தமையைத் தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவ்விடயம் தொடர்பில் சகல கட்சிகளும் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தமது காத்திரமான முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கனடிய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கனடியத் தமிழர் பேரவையினர் இவ்விடயம் தொடர்பாக உரையாடினர்.
இது தொடர்பாக தாம் ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் கனடிய சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்டோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சனநாயக முறையிற் தமது பணிகளைத் தொடரலாம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதேவேளை இலங்கை அரசு விதித்த தடையானது அது அந்த நாட்டுக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். தாம் இதற்கு எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஐ.நாவின் மனிதவுரிமைக் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் பல நாடுகள் கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாகக் கனடியத் தமிழர் பேரவையும் மற்றும் பல அமைப்புகளும் மும்முரமாகச் செயற்பட்டன.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாகப் புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டுச் சட்டங்களுக்கு அமையச் செயற்படும் தமிழர் அமைப்புகளையும், தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.
இலங்கை அரசின் இத் தன்னிச்சையான முடிவு மற்றும் அதன் ஜனநாயக விரோதப் போக்குத் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் தமிழரின் குரலை ஒடுக்கு முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுப் பன்னாட்டு விசாரணைக்குத் தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற அறிவிப்புத் தொடர்பாகவும் பல சந்திப்புகளை நேற்று ஒட்டாவாவில் கனடாவின் முக்கிய கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை மேற்கொண்டது.
ஒட்டாவாவில் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் ஆகியவற்றுடன் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. இராஜ் தவரட்ணசிங்கம், செயலாளர் செல்வி வாணி செல்வராசா, நிறைவேற்று இயக்குனர் திரு டன்ரன் துரைராசா மற்றும் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் இச் சந்திப்புகளிற் பங்கேற்றனர்.
இச் சந்திப்பின்போது, கனடாவில் ஜனநாயக ரீதியாகச் செயற்படும் பொது அமைப்புகளையும் தனிப்பட்டோரையும் இலங்கை தடை செய்தமையைத் தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இவ்விடயம் தொடர்பில் சகல கட்சிகளும் கலந்து ஆலோசனை செய்த பின்னர் தமது காத்திரமான முடிவை அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கனடிய வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கனடியத் தமிழர் பேரவையினர் இவ்விடயம் தொடர்பாக உரையாடினர்.
இது தொடர்பாக தாம் ஆழ்ந்த கவனம் செலுத்துவதாகவும் கனடிய சட்டங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் அமைப்புகள் மற்றும் தனிப்பட்டோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சனநாயக முறையிற் தமது பணிகளைத் தொடரலாம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதேவேளை இலங்கை அரசு விதித்த தடையானது அது அந்த நாட்டுக்கு வெளியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். தாம் இதற்கு எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment